உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நம்பிக்கை வாக்கு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 பட வேண்டியவர்கள் தான். அதற்காக இதே மாதிரியான காரியங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே போனால், மாணவர்கள் என்ற ஒரே ஒரு தலைப்பின் கீழ் வருகிற காரணத் தால் எல்லா வன்முறைகளையும் நாம் அனுமதித்துக் கொண்டே போனால் நாடு எங்கே போய் நிற்கும் ? அதைத் தயவுசெய்து அனைவரும் சிந்திக்க வேண்டும். கவலை என்னுடைய படம் உடைக்கப்பட்டதற்காக நான் கவலைப் படவில்லை. ஆயிரம் ப த்தை உடைக்கட்டும் கவலையில்லை. என்னுடைய பட த்தின்மீது சாணத்தை வீசியிருக்கிறார்கள். அதற்காக நான் கவலைப்படவில்லை. என்னுடைய படத்தின் மீது சாணத்தை வீசிவிட்டுக் கையை அசிங்கப்படுத்திக் கொள்கிறார்களே என்று தான் கவலைப்படுகிறேன். கையையும் கருத்தையும் அசிங்கப்படுத்திக் கொள்கிறார்களே; எதிர் காலத்தைப் பாழாக்கிக் கொள்கிறார்களே என் று தானே தவிர வேறு அல்ல. சட்டக் கல்லூரி மாணவர்கள் அர்த்தாவில் ஈடுபட்டால், வேலை நிறுத்தத்தில் ஈடு பட்டால், அமைதியாக ஊர்வலம் செல்ல வேண்டும். அப்படி யில்லாமல், குறளகத்தில் நுழைவானேன்? அங்கேயிருக்கும் படத்தை உடைப்பானேன்? யாராவது தடுத்தால் குறளகத் தில் போலீசார் நுழைந்து அடித்தார்கள் என்று செய்தி வரும். நாளைக்கு ஒத்தி வைப்புத் தீர்மானம் வரும். பத்திரிகை களில் செய்தி வேறு பெரியதாகப் போட்டாலும் போடலாம். மாணவர்கள் கிளர்ச்சியில் ஈடுபடுவதால் அவர்களின் எதிர் காலம் பாழடிக்கப்படுகிறதே என்று தான் கலவைப்படுகிறேன். மாணவர்கள் கிளர்ச்சி,தமிழ்நாட்டில் மட்டும் நடப்பதாக யாரும் எண்ணிக்கொள்ளக்கூடாது. உலகம் முழுவதும் நடைபெறுகிறது. இங்கேயும் நடைபெறுகிறது. இந்தியா லில் பல்வேறு மாநிலங்களில் இந்தக் கிளர்ச்சி நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. டெல்லி பல்கலைக் கழகத்தில்மாண வர்கள் கிளர்ச்சி - துணைவேந்தர் தாக்கப்பட்டார். பல்கலைக் கழக அலுவலகத்தை மாணவர்கள் கைப்பற்றிக்கொண்டார் கள். காவலர் தலையிட்டார்கள். ஒரு மாத காலமாக அந்தப் பல்கலைக்கழகம் மூடிக்கிடக்கும் நிலைமை. பஸ்கள் தீயிடப் ஆகிய சம்பவங்கள் நடைபெற்று இருக்கின்றன. கௌகத்தி பல்கலைக்கழகம், அஸ்ஸாம் மாநிலத்தில் இருக் பட்டன. ய கிறது. இந்த மாநிலத்தில் மொழிக்கிளர்ச்சி, பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டன', எங்கும் வன்முறைச் செயல்கள் பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு முழுவதும் கலவரச் சூழ்நிலை. இப்படி, மாணவர்களைப்பற்றிய செய்திகள் வராமல் இல்லை. ஆந்திரப் பிரதேசத்தில், டாக்டர் ஹாண்டே அவர் ள் குறிப்பிட்டது போல், முல்கி விதிகளைக் குறித்து, ஆந்திரா, தெலிங்கானா பகுதிகளில் மாணவர்கள் வன்முறைக் கிளர்ச்சி, கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுக் கிடக்கின்றன. அரசுச் சொத்துக்களுக்கும், பொதுச் சொத்துக்