பெருமூச்சு அந்தப் பூரிப்பு ஏற்படாமல் செய்யத்தான் நேரு வின் பாணியிலே தமிழ் நாட்டில் பலர் பேசுகிறார்கள். திராவிடம் பிரிவதற்கான அடிப்படை சூழ்நிலை கள் அமையக்கூடாது என்பதிலே அக்கரை செலுத் தும் பலர் "செய்ததை மறந்திடுக! செய்யப் போவதைப் பார்த் திடுக" என்று கூறுகிறார்கள். ஆசை காட்டுகிறார்கள். சூழ் நிலைகள் காரணமாக, காங்கிரசை எதிர்ப் போரின் ஓட்டுக்கள் பிரிந்து விடுமா, என்கின்ற சந்தே கத்திற்கு இடமில்லாமல் செய்ய, திராவிட மக்கள் மாட்டுப் பெட்டியில் ஒரு ஓட்டுக்கூடப் போடாமல் இருந்துவிடவேண்டும். அதிலே நூறு ஓட்டுவிழுந்தால்தானே எண்பதும், அறுபதும் பெற்ற இரண்டு அபேட்சகர்களை காங்கிரசு வெல்ல முடியும். ஆகையால் திராவிட மக்கள் நேருவும், அவர் தம் குரலுடையவரும் வடிக்கிற நீலிக்கண்ணீரிலே ஏமாந்து விடாமல், திராவிடநாட்டுப் பிரச்சினையை மறந்து விடாமல், திரவிடம் பிரிந்தால் தீமைகள் விலகும்! விலகும் என்பதை நெஞ்சிலே கொண்டு காங்கிரசை ஒழிக்க முனைய வேண்டுகிறோம். சிலப்பதிகார கோவலன் கேட்ட மன்னிப்பிலே தெளிவு இருந்தது. வாஞ்சை இருந்தது! தேர்தல் கோவலன் கேட்கும் மன்னிப்பிலே தெளிவு இல்லை! வஞ்சகமும் மறைந்திருக்கிறது! 68
பக்கம்:பெருமூச்சு.pdf/70
Appearance