உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முத்தாரம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடிக் காற்று. சீறியடிக்கும் ஆடிக்காற்றே! யாரைப் பயமுறுத்துகிறாய். சிம்மாசனம் ஏறியிருப் போரின் சினத்தை விடப் பெரியதோ உன் சினம்! அதையே அனுபவித்தவன் நான். உற்றார்,உறவினர், மனைவி, மக்கள்,தாய், தந்தை, நண்பர், யாரும் என்னுடன் இருக்கக் கூடாது என்று தடை போட்ட வர்கள், உன்னை மாத்திரம் உள்ளே அனுப்பி வைத்த ரகசியந்தான் என்ன! வெளியிலே அவர்களின் வெறி பிடித்த தர்பாரை நான் காண முடியாது என்பதற் காக உன் உருவிவே அந்தத் தர்பாரை எனக்குக் காட்டுகிறார்களா என்ன! ஆடிக்காற்றே! மரங்களை ஏன் இப்படி ஆட்டிவைக்கிறாய்? மந்திரவாதி பேயாட்டி வைப்பது போல ஏன் ஆட்டிவைக்கிறாய்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முத்தாரம்.pdf/8&oldid=1706682" இலிருந்து மீள்விக்கப்பட்டது