உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விடுதலைக்கிளர்ச்சி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுதலைக் கிளர்ச்சி 48 களிலிருந்து விடுபெற வேண்டுமென்ற கிளர்ச்சியை யும் இணைத்துக் கொண்டிருப்பதுதான் நம்முடைய விடுதலைப் போர். புதூமை தாகம் உதயமாக வேண்டும் என்ற ஆர் வம் கொழுந்து விடுகிறது நாடெங்கும் இப்போது ! ஏ புதுமையிலே மோகம் ஏற்பட்டிருக்கிறது என் றால், புதுமை புன்சிரிப்புக்காரி - பூரிப்பு தவழும் முகத்தினள், மயக்கு மொழிக்காரி, மாயாஜாலக்காரி, வர்ண விகோதனி, என்கின்ற காரணங்களால் அல்ல! பழமை - கூனி, கிழவி, நடை தளர்ந்தவள் என்ற காரணத்தால்தான்! பழமையை மனைவியாகக்கொண்டு இதுவரையில் குடும்பம் நடத்தியவர்கள், புதுமையை வாவது, மகளாக மருமகளாகவாவது ஏற்றுக்கொள்ளட்டும் என்றுதான் நாம் கூறி வருகிறோம். புதுமையை விரும்பும் நாமும், புதுமையிடம் நாட்டம் கொள்வது, கண்ணகியை வெறுத்து மாதவியிடம் கோவலன் கொண்ட நாட்டத்தைப் போன்றது அல்ல ! பழமை,தாய் போல இருந்து அனுபவ மொழி கள் சில சொல்லட்டும், நாமும் தாயிடம் செலுத்தும் அன்பை அதனிடம் செலுத்துவோம்.