இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
11
"கேட்டார்ப் பிணிக்கும் தகைய வாய்க்
கேளாரும் வேட்பமொழியும்" சொல்லேருழவர்
க
கலைஞர்.
திறனறிந்து சொல்லைச்
சொல்லுவதும், பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல்
இன்மையறிந்து
சொல்லுவதும் கலைஞர் அவர்களுக்கு இயல்பாக வரப்பெற்ற கலையாகும். செறிந்த சிந்தனை, தேர்ந்த சொற்கள் - இவையிரண்டும்
கலைஞரது
சொற்பொழிவுகளின்
அடிநாதங்களாகும். சட்டப்பேரவையில்
கலைஞர்
ஆற்றிய
உரைகளைப்
படிக்கும்போது இந்த உண்மைகளை யாரும் எளிதில் உணர முடியும். பரபரப்பும் விறுவிறுப்பும், ஆழமும் அழகும் மிகுந்திருக்கும் அவரது உரைகள் காலத்தின் கண்ணாடிகளாகும். அவரது உரைகளில் காணப்படும் நுட்பமான புள்ளிவிவரங்களும்,
வாதத்திறமையும்,
6
நகைச்சுவையும்
படிப்பவர்களின் கருத்தை நிச்சயம்
கவர்ந்திழுக்கக்கூடியவை.