உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

40 புதுமைப்பித்தன் கதைகள் கூலிக்காரர்களின் கூட்டம் ஸ்டோர் மானேஜர் வீட்டுப் பக்கத்தை நாடியது. கூலிக்காரர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் என்று தெரிந்ததும், ராமச்சந்திரனுக்குப் பயம் அதிகமாகி யது. மரகதத்தையும் அவள் வீட்டிலுள்ளவர்களையும் ஏதாவது செய்துவிட்டால் என்ன செய்வதென்று கவலைப் பட்டான். வெள்ளைச்சியிடம் தன் மனத்தில் உள்ளதைக் கூறி னான். அவளுக்கு முதலில் சம்மதமில்லை. பிறகு அவன் இஷ்டத்திற்காகச் சென்றாள். அங்கு போனதும்தான் நடந்த சமாச்சாரம் தெரிந்தது. மரகதத்தையும் தாமோ தரனையும் அழைத்துக்கொண்டு துரை பங்களாவிற்கு வந்தான். மருதிக்குக் காவலாக வெள்ளைச்சி நின்றுகொண்டிருந் தாள். அப்பொழுது கூட்டம் அவர்கள் வீட்டை நோக்கி வந்தது. வெள்ளைச்சி முரட்டுத் தைரியம் கொண்டங்கள் : "கிழவன் போய்விட்டான், இனி ஒன்றும் செய்ய வேண்டாம்!" என்று கூவினாள் கூட்டத்தில் பலருக்கு அவ்வித அபிப்பிராயம் கிடை யாது. ஆனால்,முதல் ஆவேசம் அடங்கிவிட்டது. எல்லோ ரும் மெதுவாகத் திரும்பினார்கள். மருதிக்குப் தெளியவில்லை. பிரக்ஞை வந்தது; ஆனால் சித்தம் ராமச்சந்திரன் துரையிடம் நடந்த சமாச்சாரங்களைக் கூறினான். துரையோ அநுபவம் பெற்றவர். குற்றம் அதிகாரிகள் பக்கம் இருக்கிறது என்று தெரிந் ததும், சமாதானம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று தெரிந்துகொண்டார். பத்திரிகையில் கம்பெனியின் பெயர் அடிபடுவதில் அவருக்குப் பிரியமில்லை. அன்று விடியற்காலம் போலீஸ் பட்டாளம் ஒன்று வந்தது.