உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41

துன்பக் கேணி 41 விவகாரங்கள் ஒருவிதமாக முடிவதற்குக் காரணம் துரைதான். துரை கொலையை நாஸூக்காக அமுக்கி விட்டார். பத்திரிகைகளில் இந்த விஷயம் வெளிவரக் கூடாது என்பதே அவர் கவலை. மருதிக்குப் பைத்தியம் தெளியவே யில்லை. அவளும் வெள்ளைச்சியும், ராமச்சந்திரனும் எங்கோ சென்றுவிட் டார்கள். 'வாட்டர் பாலத்தில் மறுபடியும் அமைதி குடி கொண்டது. தேயிலை உற்பத்தியில் அது தன்னை மறந்தது. மரகதம்! அவளும் இப்பொழுது 'வாட்டர் பாலத்தி வில்லை. தாமோதரன், இப்பொழுது நெல்லூர்ப் பக்கத்தில் வாத்தியாராக இருக்கிறானாம். அவனுடன் மரகதம் இருப் பதைப் பார்த்தால், அவர்களுக்குக் கலியாணமாகிவிட்டது என்று தான் நினைக்கவேண்டீ யிருக்கிறது. அப்படித்தான் பலரும் சொல்லிக்கொள்ளுகிறார்கள்.