உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125

வாழ்க்கை ! 125 நாடோடியின் வாழ்க்கையில் முதல் முதலாக அவன் எதிர்பார்த்தபடி சம்பவிக்கும் ஓர் அற்புதம் நிகழ்ந்தது. "நீர் எங்கே போராப்பிலே! பாவநாசத்துக்கா?" என் றான் வண்டிக்காரன். ஆமாம்! யாரு வண்டி!" "இந்தக் காட்டுலே பண்ணையெ எசமான் வண்டி தெரியாத ஆளுவளும் உண்டுமா! கல்லடக்குறிச்சி பெரிய அய்யரு வண்டி. பளைய பாவநாசத்துலே, பட்டணத்திலே யிருந்து அய்யமாரும் அம்மாமாரும் ஊரு பாக்க வந்திருக் காங்க!கூட சாமியாரும் வந்திருக்காரு. அவுங்க எல்லாம் சீசப் புள்ளெங்க. அவரைப் பார்த்தால் சாமியாரு மாதி ரியே காங்கலே. பட்டும் சரிகையுமாத்தான் கட்டராரு கூட வந்திருக்காளுவளே, கிளிங்கதான்!" என்று அடுக்கிக் கொண்டே போனான் வண்டிக்காரன். இதென்ன வேஷம் என் என்று ஆச்சரியப்பட்டான் நாடோடி. வண்டியின் ஒரு மூலையில் கிடந்த தியாசபி புஸ்தகங்கள் வந்திருப்பவர் யார் என்று விளக்கிவிட்டன. மனத்தின் குறுகுறுப்புச் சாந்தியானதும் வண்டிக்காரனின் பேச்சில் லயிக்கவில்லை. 'ஊச்' சென்று கொண்டு மனத்தை வெளியில் பறக்க விட்டான் நாடோடி. அது, கூடு திரும்பும் பட்சிபோல, பழைய நினைவுக் குப்பைகளில் விழுந்தது. . இன்று இந்த வண்டியில் ஏறியதுதான். இந்த நாற் பது நாற்பத்தைந்து வருஷங்களில், முதல் முதலாக அவன் விரும்பி நிறைவேறிய ஆசை. 'ஆசை! அதற்கும் மனிதன் சொல்லிக் கொள்ளும் லட்சியம் என்பதற்கும் வெட்கமே கிடையாது. இலட்சி யத்தால் நடக்கிறதாம். நீதியால் நடக்கிறதாம்,தர்மத்தால், காதலால் வாழ்க்கை நடக்கிறதாம்! உண்மையில் இதில் ஏதாவது அர்த்தமிருக்கிறதா? வாழ்க்கையில் ஒன்றுதான் நிஜமானது. அர்த்தமுள்ளது. அதுதான் மரணம். காதல், வெறும் மிருக இச்சை, பூர்த்தியாகாத மனப்பிராந்தியில் ஏற்பட்ட போதை. நானும் சுகம் அனுபவித்தாச்சு. என்ன