உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

189

காலனும் கிழவியும் 189 மாட்டெ ஓட்டிக்கிட்டு வந்திருன்னு சொன்னா,மூதி...... என்று சொல்லிக்கொண்டே தண்ணீர்க் கலயத்தை எடுத் தாள். புறக்கடையில் திடுதிடுவென்று எருமைக்கிடா வந்து நின்றது. அதன் மேலிருந்த கருத்த யுவன் குதித்தான். 'ஏலே மாடா,எத்தினி தெறவெதான் ஒன்கிட்டச் சொல்லி மாரடிக்க, மூதி, தொளுவிலே கட்டி, பருத்தி விதையெ அள்ளி வய்யி பாளையங்கோட்டை வந்திருந்தாவ.நாளைக்குக் கடாவெ கொண்டாரச் சொன் னாவ!" என்றாள் வந்தவனைப் பார்த்து. (60) வந்தவன்தான் எமதர்ம ராஜா. எசமா பாவம், கிழவிக்கு அவ்வளவு கண் பஞ்சடைந்து போய்விட்டதா?" என்று அவன் மனம் இளகியது. கிழவி யின் கடைசி விருப்பத்திற்குத் தடையாக ஏன் இருக்க வேண்டும் என்று எருமையைத் தொழுவில் கட்டிவிட்டு. பருத்தி விதையை அள்ளி வைத்தான். பூலோகத் தீனி யைக் கண்டிராத எருமை திருதிருவென்று விழித்தது. கிழவி திடுக்கிட்டுவிடாமல். இதமாக வந்த காரியத் தைத் தெரிவிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு, குனிந்து குடிசைக்குள் நுழைந்தான் யமன். . 'ஏலே அய்யா, அந்த வெத்திலைச் சருகை இப்பிடித் தள்ளிப் போடு!" என்றாள் கிழவி. வெற்றிலையை எடுத்துக் கொடுத்துவிட்டு, அதிருக் கட்டும் கிழவி, நான் யார் தெரியுமா? என்னை நல்லாப்பாரு! நான்தான்..." என்று ஆரம்பித்தான் எமன். என்ன குடிச்சுப்பிட்டு வந்தியாலே! எனக்கென்ன கண்ணு பொட்டையாய்ப் போச்சுன்னு நினைச்சிக்கிட்டி யாலே" கிழவிக்கு அவன் நின்ற நிலையைப் பார்த்ததும், மத்தியானச் சம்பவம் ஏதோ நினைவுக்கு வந்தது. ளைப் "சிங்கிகொளத்தா மவளே, அவதான் சொக்கி, அவ பார்த்திருக்கியாலே நேத்துக்கூடச் சுள்ளி பொறுக்க வந்தாளே...அவ அப்பங்காரன் வந்திருந்தான்