உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

நினைவுப் பாதை மேலச் செவல் வைரவன் பிள்ளை என்ற பாலசுப்பிர மணிய பிள்ளையின் மனைவி வள்ளியம்மை யாச்சி நேற்றுத் தான் இறந்துபோனாள். தம்பதிகள் இருவரும், ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்கு மேல். வாழ்க்கையின் மேடுபள்ளங் களை யெல்லாம் ஒன்றாகவே கடந்து வந்திருக்கின்றனர். வள்ளியம்மை யாச்சி இறந்து போனாள். ஏதோ தெய்வ சங்கற்பம் அப்படி. இன்று காடேற்று (இரண்டாம் நாள் கிரியை). நீண்டநாள் வியாதி ஒன்றுமில்லை. போன சனிக்கிழமை புழக்கடையில் கால் வழுக்கி விழுந்தாள். இடுப்பிலும் விலாவிலும் ஊமையடி. அதில் படுத்தவள் தான் எழுந்திருக்கவே யில்லை. வயதில் மூத்தவர் இறந்தால், அழுகைக்கும் ஓலத் திற்கும் குறைவில்லாவிட்டாலும். வருத்த மிருக்காது. பெண்கள் ரஸித்து அழுவார்கள்:- வார்த்தைகள் முத்து முத்தாய்க் கோவையாக வந்து விழும். அத்துடன் ஓரிரண்டு துளி கண்ணீரும் கலந்திருக்கலாம். ஆனால் அது அழுகிற வர்களின் சொந்த அந்தரங்க வருத்தத்தைப்பற்றியதாகவே யிருக்கும். அன்று இன்னும் விடியவில்லை. விடிவெள்ளி எதிர் வீட்டுக் கூரைக்கு ஒரு முழ உயரத்தில் தொங்குவது போல் தெரிகிறது. வாசல் தெளிக்கும் சப்தங்கூடக் காலை யின் வரவை எதிரேற்கவில்லை. ஏன், 'துஷ்டிக்காக (இழவுக்காக அழுகிறவர்கள் கூட எழுந்திருக்கவில்லை என்றால் வைரவன் பிள்ளை வளைவின் வெளிக் குறட்டில், கோரைப் பாயின் மீது முழங்காலைக் கட்டிக்கொண்டு ஓர்