உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/2

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புதுமைப்பித்தன் கதைகள்
முழுத் தொகுப்பு

காலச்சுவடு பதிப்பகம் 1998இல் புதுமைப்பித்தனின் அச்சிடப்படாத/ தொகுக்கப்படாத படைப்புகளை 'அன்னை இட்ட தீ' என்ற தலைப்பில் வெளியிட்டது. இப்பொழுது புதுமைப்பித்தனின் அனைத்துப் படைப்புகளையும் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டு வருகிறது.

இந்த முதல் தொகுப்பில் புதுமைப்பித்தனின் கதைகள் அனைத்தும் இடம்பெறுகின்றன. காலவரிசையில் கதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. முதன்முதலில் இக்கதைகள் வெளியான இதழ்களோடும் புதுமைப்பித்தன் காலத்தில் வெளியான முதல் பதிப்புகளோடும் ஒப்பிடப்பட்டு, திருத்தமான பாடத்தோடு இந்நூல் அமைந்துள்ளது. பின்னிணைப்புகளில், கதைகளை வெளியிடப் புதுமைப்பித்தன் பயன்படுத்திய புனைபெயர்கள், பதிப்புக் குறிப்புகள், பாடவேறுபாடுகள் முதலானவை இடம்பெறுகின்றன. பல்லாண்டுக்கால ஆராய்ச்சியில் உருவாகியுள்ள தொகுப்பு இது.

ஆ. இரா. வேங்கடாசலபதி 'அன்னை இட்ட தீ' நூலின் பதிப்பாசிரியர். தமிழ்ச் சமூக வரலாறு தொடர்பாகக் குறிப்பிடத்தகுந்த ஆய்வுகள் செய்துள்ளவர். திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்

கழகத்தில் வரலாற்று விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார்.