பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரஞ்சித் எழுந்தார்: பனியனுக்கு வெளியே நரிப்பல் டாலர் மைனர் சங்கிலி டால் அடிக்கிறது: மைனர் செயின் அவருக்குப் படுஎடுப்பு: அவர் நாளும் பொழுதும் மைனர்தானே?-எழுந்தவர். மேலே அ ண் ணா ந் து நோக்கினார்; கண்களில் “ப்ளாக் அண்ட்நை'ட் சிகப்பு மறைத்திருந்தது: “ஷவர் பாத்' அவருக்குப் புதிய தெம்பை ஊட்டியிருக்கலாம்: ‘ஓல்ட் ஸ்பைஸ் புதிய உணர்வைத் தூவிவிட்டிருக்கவேண்டும். அவரது கண்கள் நாற்புறத்திலும் ரங்கராட்டினம் சுற்றும். கரங்கள் குவிகின்றன!

அதோ, மனிதச் சாதி-சமுதாயத்தின் சீர்திருத்த வாதி, அண்ணல்!

பாரதி; 'வாழ்க, நீ எம்மான்!”

அங்கே: அண்ணா அறிஞர்.

விவேகானந்தரும் இருப்பார்.

தாகூர், இதோ.

‘வா, இந்தப் பக்கம்!-வந்தவர். தமிழகக் காந்தி.

ஆம்; அவர்தான் “கல்கி!”

ஒன்றே தேவன், ஒருவனே தெய்வமாக, தெய்வங்கள் பல!-அதோ, அதோ!...

“ஊம், நெய் ஊத்து!’

“ஆகட்டுமுங்க, ஐயாவே!”

“அப்பறம்...?*

“பருப்பு!”

ஊத்துக்குளி மணம் மகா அற்புதம், போங்கள்!

அடடே, போய்விடப் போகிறீர்கள்!

அ-7

101