இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பக்குவமெய்ஞ் ஞானியென உலகம் போற்றும்
பாரதியைக் கண்டுமகிழ் பேறு பெற்றோன்;
மிக்கநறுங் கலைத்தமிழ்நூல் ஒன்று கூடி
வெண்ணிறு புனைந்ததென விளங்கும் சான்றோன்;
தக்கதிரு வாசகத்தை மூன்று போதும்
தலைதாழ்த்திப் பணிந்திடுவோன்; எங்கள் ராய
சொக்கலிங்கன் எனும்பெயர்கொள் தமிழ்க் கடற்குச்
சொல்விருந்தாம் இச்சிறுநூல் உரிமை யாகும்.