பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

53



அதன் பேச்சிலே மயங்கியதால், நான் நின்ற இடத்தை விட்டு நகரவில்லை, பார்க்கவில்லை என்றது தாய்.

கரடு முரடான பாறை, வழவழப்பான பிறகு நீர்வீழ்ச்சியைப் பார்த்துக் கேட்டது.

நீர்வீழ்ச்சியே, எப்படி என்னை வழவழப்பாக ஆக்கினாய்?

முரட்டுத்தனத்தை மிருதுவாக்குவாதும், மீறி வருவதைத் தாக்காமல் தாவுவதும் - எனது வழக்கம் என்றது.

அறிஞர் அண்ணாவும் அரசியலில் முரடர்களை மிருதுவாக்கி, வழவழப்பாக்கிப் பக்குவப்படுத்தினார்.

குறுக்கே வந்த தடைகளைத் தாவிக் குதித்தார்!

நீர்வீழ்ச்சி இப்போது ஆழமான இடத்தில் விழுந்ததால் - தண்ணீர்ப் பூவை அங்கே மலர வைத்தது.

எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கின்ற நீர்ப்பள்ளம் - அங்கே ஆடிச் சிரிக்கும் மேடு தெறிக்கும். இது உண்மை!

அண்ணா மிகவும் ஆழமானவர் அதனால் சிரித்தார்:

வண்ணக் கதிர்களை - எண்ணச் சிதறல்கள் என்பார்கள்!

இப்போது வண்ணக் கதிர்கள் நீர்த்துளிகளின் நெருக்கத்தில் பாய்கின்றன.

நீர்த்துளி பறக்க ஆரம்பிக்கிறது.

நுணுகியச் சிதறல்கள், அருகிலிருக்கும் புற்கள் மீது படிகின்றன.

அத்தனையும் வைரத் தூசுகள்!

அவை தண்ணீர்ப் பிஞ்சுகள்!

பிஞ்சு, தாய் வீழ்ச்சியைப் பார்த்துச் சிரிக்கிறது!

ஓய்வெடுக்கவா சென்று விட்டாய்? என்று நீர்வீழ்ச்சி கேட்கிறது.

வண்ணப்பற்களைக் காட்டித் தண்ணீர்ப் பிஞ்சு தலையாட்டுகிறது!

பிரவாகத்தில் கலந்துவிடு - இல்லையென்றால்; உனது சிறிய உடலை எறும்பு கூடச் சிதைத்து விடும் - என்றது நீர்வீழ்ச்சி!