இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ாாதிங்ாபுரை தமிழ் மணமும் தமிழ் உணர்வும் நாட்டுப் பற்றும் நிரம்பிய கவிதைகளே பருவமழை என்னும் தலைப்பில் கவிஞர் கு. சா. கி. அவர்கள் இலக்கிய அன்பர்களுக்கு அளித்துள்ளார்கள். இதைப் புத்தக வடிவில் வானதி பதிப்பகத்தில் வெளியிடுவதைப் பெருமையாகக் கருதுகிறேன். தமிழ் நெஞ்சங்களைப் பருவமழை நிச்சயம் குளிர்விக்கும். தமிழ்ப் பயிர் செழிக்க பருவமழை பயன்படும். இதை அளித்த கவிஞர் கு. சா. கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும், அழகிய முன்னுரை அளித்த சிலம்புச் செல்வர் ம. பொ. சிவஞானம் அவர்களுக் கும், அணிந்துரை அளித்த அருள்மொழியர்சர் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களுக்கும், ஆய்வுரை செய்துள்ள சிலம்பொலி சு. செல்லப்பன் அவர்களுக்கும், வாசக அன்பர்களுக்கும் நன்றி. ஏ. திருநாவுக்கரசு வானதி பதிப்பகம்