இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கற்பிக்கும் வழிகளில், செயற்கை முறை, இயற்கை மூறை என்று முன்ன தாகக் கூறியிருந்தோம்.
செயற்கையான போதிக்கும் முறை என்பது, வாய் மொழி மூலமாகவே விளக்கம் அளிப்பது. செயற்கை மூறையால் கற்கிற மாணவர்களுக்கு மறைமுகமான அனுபவங்களே (Indirect Experience) கிடைக்கிறது.
இயற்கையான போதனை முறை என்பது, மாணவர்கள் தாங்களே நேரடியாகப் பங்கு பெற்று, கண்டு கேட்டு, உற்று அறிவதாகும் மாணவர்கள் சுற்றுலா செல்வது போன்ற அனுபவ முறை.
செயற்கை முறையில், ஓர் ஆசிரியர் கற்பனையில் உருவாக்கி, கனிவார்ந்த சொற்களைப் பயன்படுத்தி, கவர்ச்சியான வழியில், கேட்பவர் புரிந்து கொள்ளுமாறு கற்பிக்கும் பணியாற்றுகிறார்.
இயற்கை முறை என்பது, ஓர் ஆசிரியர் இயற்கையான பிரதேசங்களையும், இடம் பெற்றிருக்கும் சூழ்நிலைப் பொருள் களையும் காட்சிப் பொருளாகக் காட்டிப் போதிப்பதாகும்.