அகிலத்திரட்டு அம்மானை/அகிலம் ஒன்று/அசுரர்கள் அழிவு

விக்கிமூலம் இலிருந்து
அசுரர்கள் அழிவு
சூரனவன்செய்த துட்டம்பொறுக்காமல்
வீரமுள்ளதேவர் விரைந்தேமுறையமிட
தேவர்முறையஞ் சிவனார்மிகக்கேட்டு
காவலாய்நித்தங் கைக்குள்ளிருக்கின்ற
பெண்ணமுதைப்பார்த்து புகல்வாரங்கீசுரரும்
கண்ணேமணியே கருத்தினுள்ளானவளே
பூலோகந்தன்னிலுள்ள புருடராயுதத்தாலே
மேலோகம்வாழும் விமலராயுதத்தாலும்
மலைமேலேவாழும் மாமுனிவர்தன்னாலும்
அளியாவரம் அச்சூரனுக்கேகொடுத்தோம்
தரியாமுடுக்கந் தான்பொறுக்காத்தேவரெல்லாம்
அரியோயெனமுறையே மனேகம்பொறுக்கரிதே
என்றீசர்சொல்ல இயல்கன்னியேதுரைப்பாள்
மலைலோகம்மேலோகம் வையமதிலாகாட்டால்
அலைமேல்றுயிலுமொரு ஆண்டிவுண்டுகண்டீர்
முன்னேயசூரனுக்கு முற்சாபமிட்டதொரு
வன்னச்சுருதிமுனி மந்திரபுரக்கணையாய்
வளர்ந்திருப்பான்காண் மாயருடபக்கலிலே
கிளர்ந்தமொழிகேட்டு கிருபைகூர்ந்தேயீசர்
மாலைவரவழைத்து வழப்பமெல்லாமுரைக்க
சாலப்பொருளுஞ் சம்மதித்தாங்காரமுடன்
அலையில்வளர்ந்த அதிகணைஎடுத்து
சிலையேத்தியம்பைச் சிரித்துமிகத்தொடுக்க
அம்புபகையாலும் அதிகமால்பகையாலும்
பம்யழித்துச்சூரனூர் பர்ப்பம்போல்தானாக்கி
சூரரிருவருட சிரசைமிகவறுத்து
வாரிதனில்விட்டெறிந்து வாளிசுனையாடி
மலரோனடிவணங்கி வைகுண்டம் கேட்டிடவே
பலமானகுண்டப் பதவிமிககொடுத்தார்
அவ்யுகத்தைமாயன் அன்றழித்துஈசரிடம்
செவ்வாகனின்று செப்பினாரீசருடன்