அகிலத்திரட்டு அம்மானை/அகிலம் ஒன்று/குண்டோமசாலி பாடு

விக்கிமூலம் இலிருந்து
குண்டோமசாலி பாடு
சிவனைத்தொழுது சொல்லுவாரம்மானை
தவமேதவப்பொருளே தாண்டவசங்காரவனே
எவனோவொருத்தனிட்ட சத்தமானதிலே
தவலோகமெல்லாந் தானலைவதேதெனவே
மாயனதுகேட்க வகுப்பாரங்கீசுரரும்
ஆயனேநீயுமறியலையோ ஞாயமது
குண்டோமசாலி கொடியமாபவியனாய்
பண்டோர்குறோணி பாதகன்றன்றுண்டமதாய்
பிறந்தானவனும் பேருதிரத்தன்கிழையாய்
இறந்தாரவர்களிரையாய் அவன்றனக்கு
ஆனபசிகள் ஆற்றாமலேயவனும்
வானமதுஅலைய வாய்விட்டான்கண்டாயோ
என்றுசிவனாரீ துரைக்க மாயவரும்
அன்றுமகாமால்லக் குண்டோமசாலினுக்கு
இறையாகத்தேவர்களை யேற்றநாங்கிலாக்கி
வரையானதைத்தூண்டி மறையைக்கயிறாக்கி
வாயுவைத்தோணி வருணன்றனை நிரப்பாய்
தேயமதைச்சூளத் திரைகடலைத்தான்வருத்தி
ஓடையாச்சதிர யுகம்வழியேதானேவி
தேடரிமாயன் திருவோணிதானேறி
மூவாதிமூவ ரோணிதனைத்தாள்ளிவர
காவாலிமாயன் கன்னியிலேதூண்டலிட்டு
சதிர்யுகம்மளுஞ் சண்டித்தடிமூடன்
எதிரேவருமாற்றில் இரையைமிகக்கண்டாவி
நாடிப்பசிதீர நல்லயிரையாகுமென்று
ஓடிவந்துபாவி யுழுங்கினான் றூண்டல்தனை
தூண்டலுழுங்கிச் சுரண்டிமிகக்கொழுகி
மாண்டனன்காண்பாவி வலியமலைபோலே
பாவிமடிய பரமேசுரனாரும்
தாவிச்சலத்தால் சதிரயுகமழித்தார்
சதிரயுகமழியத் தானவர்களெல்லோரும்
மதுரமொழியீசன் மலரடியைத்தான்பூண்டு
தேவர்முறையோர் தெய்வேந்திரன்முதலாய்
மூவர்களும் வந்து முதலோனடிபணிந்து
பரமனேநீரும் படைத்தயுகம்ரண்டதிலே
வரமேதுங்கேட்டு வாழ்ந்தவரைக்கண்டிலமே
அந்தசந்தமில்லா தாணுவங்கள்தானுமில்லா
இந்தவகைச்சாதி இல்லாமலீசுரரே
பிறந்தாலவனும் பெரியோனடிவணங்கி
வரந்தாருமென்று வாளாயுதத்தோடே
வலுவும்பெலமும் வாய்த்தசூரப்படையும்
கொலுவும்பெரிய குவிந்தமதில்கோட்டைகளும்
கெட்டுக்கிளை பாணிக்கிரணமதுவுடனே
நாட்டுப்பயிரால் நாளும்பசிதீர்ந்து
இருந்துபொறுக்க இராச்சியமொன்றுண்டாகும்
வருந்திமகாதேவர் மலரோனடிவணங்கி
ஆதிசிவனுமதிக சந்தோசமதாய்
வேதியரைத்தான்வருத்தி விளம்புவாரீசுரரும்