அகிலத்திரட்டு அம்மானை/அகிலம் ஒன்று/சாதி வளமை

விக்கிமூலம் இலிருந்து
சாதி வளமை
சான்றோர் முதலாய்ச் சக்கிலியன் வரையும்
உண்டான சாதி ஒக்க ஒருவினம் போல்
தங்கள் தங்கள் நிலைமை தப்பி மிகப்போகாமல்
திங்கள் மும்மாரி சிறந்து ஓங்கியே வாழ்ந்தார்
செல்வம் பெருக சிவநிலைமை மாறாமல்
அல்வல் தினம் செய்து அன்புற்று இருந்தனராம்
தான்பெரிது என்று தப்புமிகச் செய்யாமல்
வான் பெரிது என்று மகிழ்ந்திருந்தார் அம்மானை
ஒருவருக்கு ஒருவர் ஊழியங்கள் செய்யாமல்
கருதல் சிவன் பேரில் கருத்தாய் இருந்தனராம்
செய்யும் வழக்குச் சிவன்பேரில் அல்லாது
வையம் வழக்கு வாராதே இருந்தார்
அடிபணிய என்று அலைச்சல் மிகச்செய்யாமல்
குடிபொருந்தி வாழ்ந்து குடியிருந்தார் அம்மானை
சேயினுட ஆட்டு செவிகேட்டு இருப்பது அல்லால்
பேயினுட ஆட்டோர் பூதிர் அறியாது இருந்தார்
இந்தப்படி மனுவோர் எல்லாம் இருந்து ஒரு
விந்துக் கொடி போல் வீற்றிருந்தார் அம்மானை
இப்படித் தெய்வ இராச்சிய நீதமும்
மற்படி தேச மனுவுட நீதமும்
நற்புடன் தேசம் நாடி வாழ்வதை
கற்புடன் ஈசர் கண்டு மகிழ்ந்தார்