அகிலத்திரட்டு அம்மானை/அகிலம் ஒன்று/நெடிய யுகம்

விக்கிமூலம் இலிருந்து
மாலும்பிரமாவும் வாய்த்த பரமேசுரனாரும்
நாலுமறையோரும் நடுவர்மிகக்கூடி
முன்னுள்ளதுண்டமொன்றை ரண்டக்கிவைத்து
பின்னேபிறப்புப் பிரமவுருப்படைக்க
சிவாயப்பொருள்தான் சிவநிலைகொடுக்க
உபாயப்பொருள்தான் உல்லாசமேகொடுக்க
முண்டமிருபேரும் உருவாயுருவெடுத்து
தெண்டமதுகொண்டார் சிவனைமிகப்போற்றி
அப்போதுமாயன் ஆதியடிவணங்கி
இப்பொழுதீசுரரே இவர்களிருபேர்க்கும்
என்னபேருதானு இடுவோமெனவுரைக்க
வன்னப்பரமேசுரனார் வகுத்துரைப்பார்
திறந்தான்பெருகுந் திருமாலே நீர்கேளும்
பிறந்தவசுரருக்குப் பேரிடவேணுமென்றால்
மாயனேநானுமொரு உபாயம்வகுப்பேன்கேள்
ஆயனேநீயுமதுகேட்க வேணுமென்றார்
அண்டபிண்டங்காணு ஆதிகயிலாசமதில்
தெண்டனிட்டு நிஸ்டைசெய்கிறான் சுருதிமுனி
இந்தமுனியடுக்க இவர்கள்ரண்டுபேரைவிட்டு
அந்தமுனிதவத்தை அழிக்கவேசொல்லிடுவோம்
என்றுசிவமுரைக்க எல்லோருஞ்சம்மதித்து
அன்றுபிறந்த அசுரர்களைத்தானேவ
போறானேசூரன் பொருப்பொருநூறானதுபோல்
வாரானேசூரன் வாய்களிருகாதவழி
சூரருடகைகள் தொண்ணூற்றிரஞ்சதுவும்
மூரன்கால்நூறு உயர்ந்த சிரசன்பதுவும்
கண்கள்ஒருநூறு வெண்டாளமிருகலமே
துங்கணங்களாகச் சூரரடந்தேறி
கண் கவிழ்ந்துயோகங் கருத்துருத்தாய் நிற்குகின்ற
வண் கவிழ்ந்த மாமுனியை வாரியெடுத்தவர்கள்
அலைமேலெறிய ஆர்ப்பரிக்குமளவில்
கைலைமேல்ப்பரந்த கடியமுனிபகர்வான்
ஏனெடாயென்னை இருந்ததவசழித்து
வீணடாசெய்தாய் விழலாயறமோடா
என்னையெடுத்து இக்கடல்மேல் போட்டாலும்
உன்னையறுக்க ஓர் அம்பாயுருவெடுத்து
பங்காயக்கண்மாயன் பக்கமதில் நான் சேர்ந்து
உங்களிருபேரை ஊடுருவநானறுத்து
இந்தக்கடலி லெடுத்துஉங்களையெறிந்து
உங்களுடவூரை வொக்கக்கரிக்காடக்கி
நானும் வைகுண்டம் நற்பேருபெற்றிருபேன்
வானுதிருவானையென்று மாமுனியுஞ்சாபமிட்டான்
உடனேமுனியை உயர்த்தியெடுத்தே சூரர்
கடல்மேலெறிந்தாம் கர்மவிதிப்படியே
அந்தமுனியும் அரனாரருளாலே
மந்திரபுரக்கணையாய் வாரியலைக்குள்ளிருந்தான்
சுருதிமுனிதனையுந் தோயமதில்விட்டெறிந்து
உறுதிகுடிசூரர் ஓடிவந்தேகயிலை
ஈசன் தனைத்தொழுது இறைஞ்சிநின்றாரம்மானை
சுருதிமுனியுட நெட்டைதொலைத்தவர்
சுருதியசுரர் கைலைமேவியே
பருதீசூடும் பரமனைப்போற்றியே
வருதிகேட்டு வருத்தினார்சூரரே