அகிலத்திரட்டு அம்மானை/அகிலம் ஒன்று/மனு நீதம்

விக்கிமூலம் இலிருந்து
மனு நீதம்
தெய்வ நிலைமை செப்பிய பின் தேசமதில்
நெய்நீதப் பெண்கள் நிலைமை கேள் அம்மானை
கணவன் மொழிய கலவுமொழி பேசாத
துணைவி நிலைமை சொல்லுவேன் அம்மானை
கற்கதவு போலக் கற்பு மனக்கதவு
தொற்கதவு ஞானத் திறவுகோல் அம்மானை
அன்பாகப் பெற்ற அன்னை பிதாவதுக்கும்
முன்பான சோதி முறைபோல் உறவாடிப்
போற்றியே நித்தம் பூசித்து அவள்மனதில்
சாற்றிய சொல்லைத் தவறாமலே மொழிவாள்
அரசன் துயில ஆராட்டி ஓராட்டிக்
கரமானது தடவிக் கால் தடவி நின்றிடுவாள்
துயின்றது அறிந்து துஞ்சுவாள் மங்கையரும்
மயன்ற ஒரு சாமம் மங்கை எழுந்திருந்து
முகத்தில் நீரிட்டு நான்முகத் தோனையும் தொழுது
அகத்துத் தெருமுற்றம் அலங்காரமாய்ப் பெருக்கி
பகுத்துவமாக பாரிப்பார் பெண்ணார்
தவத்துக்கு அரிய தையல் நல்லார் த்ங்களுட
மனுநீதம் சொல்லி வகுக்க முடியாது
கனியான பெண்கள் கற்புநிலை மாறாமல்
இனிதாக நாளும் இருக்கும் அந்த நாளையிலே
வனிதான சாதி வளமைகேள் அம்மானை