அண்டர்மகன் குறுவழுதியார்
அண்டர்மகன் குறுவழுதியார்[தொகு]
- பாடிய பாடல் தொகை
- 4 (நான்கு)
அகநானூறு: 150 நெய்தல் திணை[தொகு]
(பகற்குறி வந்து கண்ணுற்று நீங்குந் தலைமகனைத் தோழி தலைமகளை இடத்துய்ந்து வந்து, செறிப்பறிவுறீஇ வரைவுகடாயது)
- பின்னுவிட நெறித்த கூந்தலும் பொன்னென
- வாகத் தரும்பிய சுணங்கும் வம்புவிடக்
- கண்ணுறுத் தெழுதரு முலையு நோக்கி
- யெல்லினை பெரிதெனப் பன்மாண் கூறிப்
- பெருந்தோ ளடைய முயங்கி நீடுநினைந் ( )
- தருங்கடிப் படுத்தினள் யாயே கடுஞ்செலல்
- வாட்சுறா வழங்கும் வளைமேய் பெருந்துறைக்
- கனைத்த நெய்தற் கண்போல் மாமலர்
- நனைத்த செருந்திப் போதுவா யவிழ
- மாலை மணியிதழ் கூம்பக் காலைக்
- கண்ணாறு காவிநொடு தண்ணென மலருங்
- கழியுங் கானலுங் காண்டொறும் பலபுலந்து
- வாரார் கொல்லெனப் பருவருந்
- தாரார் மார்பநீ தணந்த ஞான்றே. [1/4]
அகநானூறு: 228. குறிஞ்சித்திணை[தொகு]
(தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது. இப்பாட்டு, பகலே சிறைப்புறம்.)
- பிரசப் பல்கிளை யார்ப்பக் கல்லென ( )
- வரையிழி யருவி யாரந் தீண்டித்
- தண்ணென நனைக்கு நளிர்மலைச் சிலம்பிற்
- கண்ணென மலர்ந்த மாயிதழ்க் குவளைக்
- கன்முகை நெடுஞ்சினை நம்மொ டாடிப்
- பகலே யினிதுடன் கழிப்பி யிரவே ( )
- செல்வ ராயினு நன்றுமற் றில்ல
- வான்கண் விரிந்த பகன்மரு ணிலவிற்
- சூரல் மிளைஇய சார லாராற்
- றோங்கன் மிசைய வேங்கை யொள்வீப்
- புலிப்பொறி கடுப்பத் தோன்றலிற் கயவா
- யிரும்பிடி யிரியுஞ் சோலைப்
- பெருங்கல் யாணர்த்தஞ் சிறுகுடி யானே. [2/4]
குறுந்தொகை: 345. நெய்தல் திணை[தொகு]
(பகல் வந்து ஒழுகுவானைத் தோழி இரா வா என்றது)
- இழையணிந் தியல்வருங் கொடிஞ்சி நெடுந்தேர்
- வரைமரு ணெடுமணற் றவித்தனி ரசைஇ
- தங்கினி ராயிற் றவறோ தகைய ( )
- தழைதா ழல்கு லிவள்புலம் பகலத்
- தாழை தைஇய தயங்குதிரைக் கொடுங்கழி
- யிழுமென வொலிக்கு மாங்கட்
- பெருநீர் வேலியெஞ் சிறுநல் லூரே. [3/4]
புறநானூறு: 346. திணை: காஞ்சி; துறை: மகட்பாற் காஞ்சி[தொகு]
- பிற... ....ள பாலென மடுத்தலி ( )
- னீன்ற தாயோ வேண்டா லல்லள்
- கல்வியெ னென்னும் வல்லாண் சிறாஅ
- னொல்வே னல்ல னதுவா யாகுத
- லழிந்தோ ரழிய வொழிந்தோ ரொக்கற்
- பேணுநர்ப் பெறாஅது விளியும்
- புன்றலைப் பெரும்பாழ் செயுமில ணலனே. [4/4]
பார்க்க[தொகு]
- ( )
- ( )
- ( )