அதிராசேந்திர சோழன் மெய்க்கீர்த்தி

விக்கிமூலம் இலிருந்து

அதிராசேந்திர சோழன் மெய்க்கீர்த்தி[தொகு]

திங்களேர் மலர்ந்து வெண்குடை மண்டில
மன்னுயிர் தோறு மின்னருள் சுரந்து
நிறைநிழல் பரப்பி நிற்ப முறையிற்
செங்கோல் திசைதொறுஞ் செல்லத் தங்கள்
முலமுதற் பரிதியின் வலிசேர் புவனிக்கும்
ஒற்றை யாழி யுலாவ நற்றவத்
திருமலர்ச் செல்வியு மிருநிலப் பாவையும்
கீர்த்தியங் கிள்ளையும் போர்த்தனிப் பூவையும்
வதுவையிற் புணர்ந்து பொதுமை துறந்து
உரிமை தேவிய ராக மரபினிற் (10)
சுடர்மணி மகுடஞ் சூடி நெடுநில
மன்னவர் முறைமுறை தன்னடி வணங்க
வீரமுந் தியாகமு மாரமெனப் புனைந்து
வீரசிம் மாசனத்து உலகமுழு துடையாளொடும்- வீற்றிருந்தருளிய
மாப்புகழ் மனுவுடன் வளர்த்த கோப்பரகேசரி வர்மரான
உடையார் ஸ்ரீ ஆதிராசேந்திர தேவர்க்கு யாண்டு...


மெய்க்கீர்த்திகள் :[[]] :[[]] :[[]]