அன்பு வெள்ளம்/அறிவராய்ச்சித் திறனின்

விக்கிமூலம் இலிருந்து

அறிவராய்ச்சித் திறனின் தோல்வி

லகோரே! நீங்கள் அறிவுக்குட்பட்ட வழியிலேதான் மீட்பினைக் கொண்டு வந்திட வேண்டும் என்று நினைக்கிறீர்கள். ஒருகாலும் முடியாது. உங்கள் அறிவு தோற்றுவிட்டது. நீங்கள் தோற்றும் போனிர்கள். உங்கள் பழைய மானிட அன்பும் தோல்வி கண்டுவிட்டது.

உங்களுடைய கல்வி, பயிற்சி, ஆய்வு இன்ன பிற எல்லாம் உங்களை வெற்றி பெற்றிடச் செய்ய இயலாதன ஆயின. உங்கள் அறிவு இருக்கும் இடத்தில் அன்பினை அமர்த்துங்கள். பிறகு எல்லாம் அதனதன் படியே நடக்கும். அதற்கு நீங்கள் செல்ல வேண்டிய வழி - அன்பு வழி என்பதை மட்டும் கடைப்பிடித்தால் போதும்.

வீட்டில் இருக்கும் போது மட்டும் அல்லாமல், கடைக்குள் இருக்கும்போதும், பள்ளியில் இருக்கும்போதும் மற்ற எந்த இடத்திற்குப் போனாலும் எந்த மக்களிடம் தொடர்பு கொண்டாலும் அங்கெல்லாம் - அப்போதெல்லாம் நீங்கள் அன்புள்ளவராக - அன்பராக இருக்கிறோம் என்று எண்ணியிருக்க வேண்டும் என்பது கட்டாயத் தேவை.

மற்ற ஆண் பெண் சுமக்கும் சுமைகளையும் நீங்கள் சுமந்திட வேண்டும். இயேசு பெருமான் என்னென்ன அன்புப் பணி செய்தாரோ அவற்றையெல்லாம் நீங்களும் செய்திடல் வேண்டும் என்ற முனைப்பு உங்களுக்கு வேண்டும். முனைந்து பிறர் துன்பங்களை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். உங்களிடத்தில் இயேசு இருந்தால் என்னென்ன பணி செய்வார் என்பதை எண்ணிப் பார்த்துச் செய்யுங்கள்.

அன்பு என்பது தனித்து வருவதில்லை; அன்பு கொள்ளுமாறு செய்யும் ஆற்றலோடு வருகிறது. அன்பினால் என்னென்ன ஆக்கப் பணிகள் நிறைவேற்றப்பட வேண்டுமோ, அவற்றை நீங்கள் செய்யுமாறு உங்களைப் பின் நின்று தூண்டியும் இயக்கியும் வரக்கூடியது அன்பு!

உங்களைத் தெய்விக நிலைக்கு உயர்த்தும் அன்பு, தெய்வத் திரு ஆகிய இயேசு செய்த பணிகளையெல்லாம் செய்விக்கும் அன்பு. தேவையான பணம், வேண்டிய சுற்றம், நட்பு ஆகிய மக்கள், செல்வாக்கு ஆகியவற்றைத் தேடி அவற்றைச் சார்ந்து நிற்கும் பணிகளாகிய எளிய மக்கள் செய்யும் பணிகளைத் தான் நீங்களும் செய்து கொண்டிருந்தீர்கள். ஆனால் இப்போது அவற்றையெல்லாம் விடுத்து இயேசுவின் நற்பணிகளைப் - பொற் பணிகளை ஆற்றும் அன்புப் பாதைக்கு மாறிவந்து விட்டீர்கள்.

நீங்கள் சில சமயம் நினைக்கக்கூடும், நம்மால் ஆவதென்ன? அன்பு கொண்டால் மட்டும் போதுமா? நாம் கடன்பட்ட அத்தனையும் திருமா? தீர்க்கப்படுமா என்று. அன்பின் வயம் உங்களை ஒப்படைத்துப் பாருங்கள் பின்பு அறிவீர்கள் என்ன நடக்கிறது என்று!

“என்ன்சிடம் இன்னும் கொஞ்சம் அணம் மட்டும் இருக்குமே யானால், ஏழை எளியருக்கெல்லாம் உதவி செய்வேன்” என்று சிலர் சொல்லுகிறார்கள்.

உங்களிடம் உள்ள சிறிய தொகையினைக் கொடுத்து இப்போது உதவி செய்யவில்லை என்றால், நிரம்ப உங்களிடத்தில் செல்வம் வரும்போது இல்லாத மற்றவர்க்கு உதவி செய்ய முடியுமா என்றால் முடியாது. இப்போது, ஏழை எளியவரின் துன்பங்களில் பங்கு கொள்ளவில்லை என்றால், பிறகு எப்போதும் அவர்கள் துன்பங்களில் பங்குகொண்டு அவர்களைக் கரையேற்ற முடியாது: கை தூக்கிவிட முடியாது. அன்பு ஒரு பிடிச் சோற்றையும் பங்கிடும்; ஒரு பிடி அரிசியினையும் வாரிக் குறைத்துவிடும்.

இன்று, உங்களைப் போன்ற நிலையில் உள்ளவருடைய மக்களின் துன்பத்தைச் சுமையை மட்டும்.நீங்கள் ஏற்றுக் கொள்ள முன் வந்திருக்கிறீர்கள். அதுபோதும். பிறர் அன்புக்கு உங்களை ஒப்படையுங்கள். அந்த அன்பு இயேசு உலகுக்கு அளித்த பொற்பொருளும் நற்பொருளும் போல உங்கள் சார்பில் ஆனதைச் செய்யும்; அரும்பணி ஆற்றும், அடுத்தவர் சுமையைக் குறைக்கும் உங்களை ஆளும் அன்பு!

வஞ்சனையாளர்களைக் கள்ள வேடதாரிகளை அன்புடன் விரும்புவது என்பது அத்துணை எளிதான் செயல் அன்று. ஆனால், இயேசு அன்பு காட்டினார் அத்தகைய கள்ள வேடதாரி யிடம்! நீங்களும் அப்படிச் செய்யலாம்; செய்ய முடியும்.

விருந்து அளித்த போது உணவு அருந்தும் மேசையினைச் சுற்றி அமர்ந்தவர்களில் யூதாசுகாரியத்து என்னும் பெயர் கொண்டி யூதாவும் அமர்ந்து இருந்தான். முப்பது காசுகளுக்குத் தன்னைக் காட்டிக் கொடுத்திடத் திட்டம் போட்டிருந்ததையும் இயேசு கிறித்து அறிந்துவிைத்திருந்தார். அப்படியிருந்தும் காட்டிக் கொடுக்கவிருந்த யூதாவிடம் அன்பு காட்டினார்இயேசு.

அன்புப் பணியாற்றித் தம் கைகளில் ஆணிகளை அடித்த வனிடம் கூட அன்பு காட்டினார் இயேசு.

அத்தகைய அன்பின் திருவாகிய இயேசு கிறித்து ஆற்றிய அன்புப் பணிகளை நீங்களும், ஆற்றிடலாம். எப்படி என்பீர்கள்! இயேசுவின் அன்பில் நிலைத்திருக்கிற உங்களில் இயேசு நிலைத்திருக்கிறார். ஆகவே, இயேசுவின் இயல்பான அன்பும் பண்பும் திறனும் உங்களிடத்தில் நிலைத்திருக்க வேண்டாமோ! அந்த அன்பினால் திறனால் நீங்களும் இனி, இயேசுவைப் பின்பற்றி, இயேசுவின் அடிச்சுவட்டில் அன்புப் பணியாற்றுங்கள்.

அன்பின் பணிக்கே நாம் ஆட்பட்டு அடிதொடரின்
மன்பதையை மாற்றிடலாம் நாம்