அன்பு வெள்ளம்/நாம் அன்பின்

விக்கிமூலம் இலிருந்து

நாம் அன்பின் பிள்ளைகள்

தெய்வத்தன்மையும் மனிதத் தன்மையும் இணைந்த கூட்டுறவே - கிறித்தவம். நாம் அன்பினில் பிறந்தோம். கடவுளின் அன்பின் இயல்பை நாம் பெற்றிருக்கிறோம். உலகத்தில் உள்ள மற்ற எல்லாச் சமயங்களிலும் முற்றிலும் வேறுபட்டதாகக் கிறித்தவ சமயத்தை வேறுபடுத்திக் காட்டுவது, கிறித்தவராகிய அனைவரும் பெற்றிருக்கிறது கடவுளின் அன்பியல்பே. கிறித்தவம் என்பது ஒரு மதம் அன்று! மாந்தருள் அன்பின் இயல்பு நிரப்பப்பட்டிருப்பதாம்.

மாந்தன், அத்தகு அன்பின் இயல்பின் உச்ச நிலைக்கு உயர்கிறான்; உலகில், உள்ள மக்கள் போன்று பொதுவான வாழ்வியலில் இருந்து தந்தையின் அருட்பேருலகினுக் துக்கிவிடுகிறது - கடவுளின் அன்பியல்பு. எடுத்துக்காட் உலகில் இயேசுவுக்கும் மற்ற மாந்த இனத்தில் உள்ள மாந்தனுக்கு இடையில் இருக்கின்ற வேறுபாட்டினைப்போல நம்மையும மற்றவரிடத்திலிருந்து வேறுபடுத்திக்காட்டுகிறது அவ் அன்பின் இயல்பு, அன்புப்பண்பு!

கடவுளின் அன்புப்பண்பு, அன்பியல்புதான்் அனைத்துப் பண்பிற்கும் உள்ளமாக இருப்பது என்பதை அறிந்திருந்தும் அதனைக் கிறித்தவ மக்களுக்குச் சரியாக எடுத்துச் சொல்லவில்லை, திருச்சபைகள்!

இயேசு, புதிய படைப்பின் தலைவர் ஆவார். அந்தப் புதிய படைப்பினை ஆட்சி செய்திட, நமக்கு அன்பென்னும் சட்டத்தை இயேசு அளித்துள்ளார்.

"நீங்கள் ஒருவரில் ஒருவர் அன்பு கூருங்கள். அதனால், உலகில் உள்ள மாந்தர் அனைவரும் நீங்கள் என்னுடைய தொண்டர்கள் என்பதை அறிவார்கள்”

இந்தப் புதிய அன்புக் கட்டளையைப் புதிய அன்புச் சட்டம் தான் நம்மை ஆளவேண்டியது.

இயேசு அன்பிறைவன்! அவரே, புதிய படைப்பின் இறைவன் ஆவார்.

"உங்களுக்கு நான் புதிய கற்பனையைத் தருகிறேன்; அதனைக் கைக் கொள்ளுங்கள், உங்களில் ஒருவர் மற்றொருவரில் அன்பு கூருங்கள் அதனால் உலக மக்கள் உங்களை என் அன்பர்கள் என்று கண்டறிவார்கள்."

இந்த மறைமொழிச் சொற்கள், புதுபடைப்பினை அறிந்து கொள்ள உதவும் சின்னம்: சிறப்புக் குறியீடு (Badge) இது. நம் ஒழுகலாற்றுக்கு அடையாளச் சின்னம் என்று சொல்வதால், நாம் நமது மேற்சட்டையில், அணிந்து கொள்ளும் தங்கம் பதக்கம் என்று பொருள் கொள்ளக் கூடாது. நம் வாழ்க்கை என்று கொள்ள வேண்டும். அதுவும் எப்படிப்பட்ட வாழ்க்கை என்று எண்ணுகிறீர்கள்? இயேசு நடந்து காட்டியது போன்ற வாழ்க்கை.

பிலிப்பியர் 2-14-15, "உலகத்திலே சுடர்களைப் போல் ஒளிர்கிற நீங்கள் கோணலும் மாறுபாடுமான மரபின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடமற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு, எல்லாவற்றையும் முணுமுணுப் பில்லாமலும் தருக்கிப்பில்லாமலும் செய்யுங்கள்"

இந்த நிறைமொழியின்படி, நாம், குற்றமற்றவர்கள், கபட மற்றவர்கள்; கடவுளின் பிள்ளைகள் நாம் நமது அன்றாட வாழ்வில் செய்யும் செயல்கள் எல்லாம் அன்பின் அடிப்படையில் செய்து வருவதால், மற்ற மாந்தரிலும் வேறுபட்டவர்கள் ஆவோம் அதனால் நாம் எல்லாரும் அன்புடையர்.

கடவுள் ஒளியாயிருக்கிறார். அன்பும் ஒளியாயிருக்கிறது. நாம் நிறை அன்பில் நடந்தால், நாம் ஒளியில் நடக்கிறோம் என்பதும் உண்மை. நாம் நம்முடைய கடவுளுடன் தோழமை கொண்டுள்ளோம்.

நாம் ஒருவரில் ஒருவர் ஆன்மிகக் கூட்டுறவில் இனிது வாழ்கிறோம். ஒருவரில் ஒருவர் அன்பு கலந்து இன்புற வாழ்ந்து வருகிறோம்.