அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/அவர்களிடமும் சொல்லுங்கள்

விக்கிமூலம் இலிருந்து


(77) வர்களிடமும் சொல்லுங்கள்



அமெரிக்க அரசின் வீரர்களும் புரட்சிக்காரர்களும் ஒரு சமயம் ஞாயிற்றுக் கிழமைகளிலும் கூட போரிட்டுக் கொண்டிருந்தனர்.

மதப்பற்று மிக்க பிரபல பாதிரியாருக்கு அது மிகுந்த வருத்தத்தை அளித்தது. அப்பொழுது ஜனாதிபதியாக இருந்த ஆபிரகாம் லிங்கன் அவர்களிடம் சென்று,

“நம் கர்த்தரின் ஒய்வுநாளில் கூட இவ்வாறு போர் புரியலாமா?” என முறையிட்டார் பாதிரியார்.

நீங்கள் கூறுவதை என்னுடைய அரசு அப்படியே ஏற்றுக் கொள்கிறது” என்றார் லிங்கன்.

“இதைக் கேட்க எனக்கு மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறது”என்று கூறிவிட்டு பெருமிதத்தோடு திரும்பினார் பாதிரியார்.

“பாதிரியார் அவர்களே'! கொஞ்சம் பொறுங்கள்; ஒரு விஷயம். ஞாயிற்றுக் கிழமை போரிடும் இந்த அக்கிரமத்தை ஒழிப்பதற்கு உங்களுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி, இன்னும் ஒரு காரியத்தை நீங்கள் செய்யவேண்டும்” என்றார் லிங்கன்.

“ஜனாதிபதி அவர்களே! அது என்ன?” என்று கேட்டார் பாதிரியார். -

"அது ஒன்றும் பிரமாதம் இல்லை. புரட்சித் தளபதிகள் இந்த ஞாயிற்றுக் கிழமைகளில், நம்முடைய போர் வீரர்களைச் சும்மா இருக்கும்படி விட்டு விடச் செய்யுங்கள். அவ்வளவுதான்” எனறார் லிங்கன்.