அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/இப்படி ஒரு விளம்பரமா?

விக்கிமூலம் இலிருந்து


(73) ப்படி ரு விளம்பரமா?


ஆப்பிரிக்கக் காடுகளிலே, பிரிட்டிஷ் இராணுவப் படைகளோடு யுத்த நிருபர் ஒருவர் சுற்றிக் கொண்டே இருந்தார்.

அவர் அடிக்கடி பல செய்திகளை வெளியே அனுப்பிக் கொண்டிருந்தார். .

அவர் அனுப்பிய ஒவ்வொரு செய்தியிலும் போர்ச் செய்தியோடு ஏதாவது தேநீரைப் பற்றிய விளம்பரம் இல்லாமல் போகாது.

"தேயிலை வண்டிகள் எல்லாவிதத்திலும் சிறப்பாய் அமைந்திருந்தது”

'இராணுவ வீரர்கள் மிகவும் கடுமையாக வேலை செய்ய வேண்டியதிருந்தது. அப்பொழுது வேறு எதையும் விட ஒரு கோப்பை தேநீரே அவர்களுக்கு ஆனந்தம் அளித்தது.”

“எங்குமே பரவியிருந்த தேயிலைப் பானம் தயாரிப்பதற்காக அங்கே ஒரு கெட்டில் தயாராகக் கிடந்தது.”

இப்படியாக, ஒவ்வொரு செய்திக்கு, ஏதாவது ஒரு வசனம் பரவலாகக் காணப்பட்டது.

இதைக் கண்டு தணிக்கை அதிகாரிகள் இதன் மர்மம் என்னவோ என்று மலைத்துப் போனார்கள். -

தீர விசாரித்து அறிந்த பின்னர், அந்த நிருபர், சர்வதேச தேயிலைச் சங்கத்தின் பிரதிநிதி என்பது பிறகு தெரியவந்தது.