அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/தொடக்கமும் முடிவும்

விக்கிமூலம் இலிருந்து


(2) தொடக்கமும் முடிவும்



பிரசித்தி பெற்ற கதாசிரியர் அலெக்ஸாண்டர் டூமாஸை, ஒருவர் சந்தித்தார். அவர் தலைக்கனம் கொண்டவர், டூமாஸை மட்டம் தட்ட வேண்டும் என்பது அவருடைய எண்ணம்.

“உங்கள் மூதாதையரைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் கீழ்த்தர வகுப்பமாமே!” என்றார் தலைக்கனம் கொண்டவர்.

அமைதியாக, "ஆமாம்” என்றார் டுமாஸ்.

“உங்கள் தந்தை?”- வந்தவர் கேட்டார்.

“மலை ஜாதியினர்” என்றார் டுமாஸ்.

“உங்கள் தாத்தா?” வந்தவர் கேட்டார்

"நீக்ரோ” என்றார் டுமாஸ்.

“தாத்தாவுக்குத் தாத்தா?’ வந்தவர் கேட்டார்.

பொறுமை இழந்து விட்டார் டுமாஸ். “அவர் ஒரு வால் இல்லாக் குரங்கு! ஆனால் ஒன்று என் வம்சம் தொடங்கிய இடத்தில், உங்கள் வம்சம் முடிந்து விட்டது. அது தெரியுமோ உங்களுக்கு?” என்றார்

வந்தவர் தலைகுனிந்தார்.