அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/பதிலுக்கு பதில்

விக்கிமூலம் இலிருந்து


(84) திலுக்கு தில்



பிரபல நாவலாசிரியர் ஜார்ஜ் மூர் கவிதையிலும் கற்பனையிலும் திளைத்த மேதை. அவருக்குக்கூட இளமைக் காலத்தில் கர்வம் மிகுதியாயிருந்தது.

டப்ளின் நகர ஆர்ச் பிஷப் டாக்டர் வால்ஷ் என்பவருக்கு ஒரு நாள் ஜார்ஜ் மூர் கீழ்க்கண்டவாறு கடிதம் ஒன்றை எழுதினார்.

"அன்பார்ந்த ஆர்ச் பிஷப் அவர்களே, உங்களுக்கு விஷயம் தெரியுமோ? கிறிஸ்துவ மதத்தை நான் விட்டு விட்டேன். இப்படிக்கு, ஜார்ஜ் மூர்.”

அதற்கு உடனே பதில் கடிதமும் அவருக்கு வந்தது.

"அன்புள்ள ஜார்ஜ் மூர், ஒரு பசுவின் வால் நுனியில் ஈ உட்கார்ந்த கதை உங்களுக்குத் தெரியுமா? பசுவே, நான் போய் வருகிறேன் என்று கூறியதாம் ஈ; அப்பொழுது, பசு தன் வால் பக்கம் திரும்பி, நீ இவ்வளவு நேரம் இங்கே இருந்தது எனக்குத் தெரியாதே என்று பதில் சொல்லியதாம்.”இப்படிக்கு டப்ளின் நகர ஆர்ச் பிஷப்.