அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/210-383

விக்கிமூலம் இலிருந்து

206. பிரிட்டிஷ் ராஜாங்க உதவிபெறுங் கலாசாலைகளில் மதசம்மதபோதமும் சாதிசம்மந்த போதமும் போதிக்கலாகாது

கலாசாலைகளில் மற்றும் யாது சம்மந்தபோதம் போதிக்கவேண்டு மென்னில், சந்திரகலையானது நாளுக்குநாள் வளர்ந்து பூரணமுற்று சகலருக்கும் சுகப்பிரகாசமளிப்பதுபோல் கலை நாற்களை போதித்து விருத்தி யடையச்செய்து சகலசீவர்களையும் சுகவாழ்க்கை பெறச் செய்விக்கவும், வித்தியா நூற்களை போதித்து அரிய வித்தைகளை விருத்தி செய்து மக்களை வித்தியா விவேகிகளாக்கி தாங்கள் சுகம் பெறுவதுடன் தங்களை யடுத்த மக்களையும் சுகம் பெற செய்விக்கவும், விவசாய நூற்களை போதித்து பூரிகளின் குணாகுணங்களையறிந்து நீர்வசதிகளை யுண்டுசெய்யவும், மண்ணைப் பண்படுத்தவும் பயிறுகளை விளைவித்து தாங்களும் தங்கட்குடும்பத்துடன் மற்றய சீவராசிகள் யாவரும் சுகப்புசிப்பெடுத்து ஆனந்த வாழ்க்கைச் செய்விக்கவுமாகிய போதங்களே உலக சீர்திருத்த விசேஷ போதங்களாகும்.

உலகத்தில் தோன்றியுள்ள மக்கள் கலைநூல் விருத்தியாலும், வித்தியா நூல்விருத்தியாலும், விவசாய நூல் விருத்தியாலும், விருத்தி பெறுவார்களன்றி ஏனைய மத நூல் சாதி நூல் விருத்திகளால் ஒருக்காலும் விருத்திபெற மாட்டார்கள். இதற்குப் பகரமாய் அறிவினை விருத்தி செய்யுங் கலை நூற்களைக் கற்றுள்ளதினால் ஐரோப்பிய விவேகிகளும், அமேரிக்க விவேகிகளும், ஜப்பானிய விவேகிகளும் நாளுக்குநாள் எவ்வளவோ பேரானந்த ரகசியங்களை விளக்கி மக்களை சுகச்சீர் பெறச்செய்துவருகின்றார்கள். வித்தியாவிருத்திகளில் இரயில்வே டிராம்பே, டெல்லகிராப், போனகிராப், பொட்டகிராப், அவ்வகைகளால் ஏறிவரப்படாது நாமே தூக்கிவிடுகிறோமென்று கூறி உள்ள உயிரையும் சரிவரக் கொன்று பாழ்படுத்துவார்களன்றி தூக்கி யெடுத்துப் பாதுகாப்பார்களென்பது கனவிலும் நம்பக்கூடியதன்று.

அதுபோல் இவ்விந்தியதேசத்தில் நூதனமாக வந்துக் குடியேறிய சிலக் கூட்டத்தோர் கீழ்ச்சாதி, மேற்சாதியென்னும் சிலக் கட்டுக்கதைகளை ஏற்படுத்திக் கொண்டு பௌத்த அறஹத்துக்களைப்போல் வேறெமிட்டு தங்களை உயர்ந்த சாதி பிராமணர்களென்றும், இவர்களது பொய்ப் பிராமணவேஷத்தை சகலருக்கும் பறைந்துவந்த விவேகிகளாம் பெளத்த உபாசகர்களைத் தாழ்ந்த சாதிப் பறையரென்றும் பாழ்படுத்திவருங்கால் இத்தேசத்திய மராஷ்டர்களும், கன்னடர்களும், ஆந்திரர்களும், திராவிடர்களும் பிராமணவேஷ மணிந்து சோம்பேறி சீவனத்தை வலுவு செய்வதற்கு தங்களுக்கு எதிரிகளாயிருந்து பொய் வேஷங்களைக் கண்டித்து வந்த வடநாட்டு வங்காள பௌத்த விவேகிகளை சண்டாளர்களென்றும், வடமேற்கு மலையாள கொடுந்தமிழ் பெளத்த விவேகிகளை தீபர்களென்றும், தென்னாட்டு செந்தமிழ் பௌத்த விவேகிகளைப் பறையர்களென்றுந் தாழ்த்தி நசிப்பதற்கு தங்களது பொய்வேஷப்பிராமணக் கூட்டங்களும் பெருகி தங்களை மெய்ப்பிராமணர்களென்று நம்பி மோசம்போயக்குடிகளும் பெருகிவிட்டபடியால் பொய்ம்மத வேஷதாரிகளுக்கும் பொய்ச்சாதி வேஷதாரிகளுக்கும் வலுமிகுத்து இந்திரர்தேச யதார்த்த இந்திரர் தன்மத்தை பராயமதமென்றும் இந்தியர்களாம் பெளத்தர்களைப் பராயசாதியோரென்றுங் கூறி பலவகையாகக் கொன்றும் இழிவுபடுத்தியும் தாழ்த்தியும் நாசஞ்செய்து வந்தவர்களும் காரண காரியம் அறியாது நாளதுவரையில் தாழ்த்திவருகின்றவர்களுமாகியவர்களுக்குள் சிலர் தோன்றி தாழ்ந்தவர்களை உயர்த்தப்போகின்றோமென்று கூறுவது யாதெனில், தங்களால் தாழ்த்தி நாசமடையச் செய்தக் கூட்டத்தார் கருணைதங்கிய பிரிட்டிஷ் ஆட்சியின் செயலால் நாளுக்குநாள் சீர்பெற்று வருவதைக் கண்டு சகியாது தாழ்ந்த சாதியோரை உயர்த்தப்போகின்றோமென்றுகூறி உள்ளதையும் கெடுத்து உருதெரியாது பாழ்ப்படுத்தப் பார்க்கின்றார்கள்.

சாதிபேதமில்லா பெருங்கூட்டத்தோரை சாதிபேதமுள்ளோர் உயர்த்தப்போகின்றோமென்பது எவ்வகை உயர்த்தலோ விளங்கவில்லை. ஏழைகளுக்குக் கல்வி கற்பிக்கப்போகின்றோம், கைத்தொழில் கற்பிக்கப் போகின்றோம், கனமான உத்தியோகஞ் செய்விக்கப்போகின்றோம் என்பாராயின் அஃது யாவர்க்கும் விளங்கும். அங்ஙனமிரது தாழ்ந்த சாதிபோரை உயர்த்தப்போகின்றோமென்னும் சொல்லும் செயலுமானது இன்னுந் தாழ்த்தி நாசஞ்செய்யவேண்டுமென்னுங் கருத்தேயன்றி யதார்த்தத்தில் உயர்த்துகிறோமென்பது பொய், பொய்யேயாம்.

உயர்த்துகிறோமென்பது மெய், மெய்யேயாயின் அச்சாதிபேதமில்லா ஏழைக்குடிகளுக்கு சாதிபேதம் வைத்துள்ளோர் யாதாமொரு பணவுதவிபஞ் செய்ய வேண்டியதில்லை. கல்விசாலைகளும் வைக்கவேண்டியதில்லை. அவர்களுக்கென்றுவோர் கூட்டங்கூடி பணச்செலவுகளும் வைத்துக் கொள்ளவேண்டியதில்லை. அவர்கள் முன்னேறும் வழிகளுக்கெல்லாம் யாதொரு தடையுமின்றி வழி விட்டுவிடுவார்களாயின் அதுவே அவர்கள் செய்யும் பேருபகாரமும் அதுவே அவர்கள் கொண்ட நல்லெண்ணத்திற்கு அறிகுறியுமென்று சொல்லத்தகும். அங்ஙனஞ்செய்யாது தாழ்ந்த சாதியோரை உயர்த்தப் போகின்றோமென்றுயாது கூட்டங்கூடி ஏதுபணஞ் சேகரிக்கினும், “சூடு கண்டபூனை அடுப்பங்கடை நாடா” தென்னும் பழமொழிக்கிணங்க காலமெல்லாந் துன்பஞ்செய்து வந்தவர்கள் தற்காலம் இன்பத் தரப்போகின்றோமென்பதைத் துன்பமெனக் கருதி விலகுவார்களன்றி இன்பமென நெருங்கவேமாட்டார்கள்.

- 4:48; மே 10, 1911 -
லெத்தகிராப்பு முதலிய அரிய வித்தைகளை நாளுக்குநாள் கண்டுபிடித்து தாங்கள் சுகவாழ்க்கைப் பெறுவதுடன் அவ்வித்தைகளைக் கற்றுக் கொள்ளுவோரும், அவற்றை செய்வோரும் ஆனந்த சுகவாழ்க்கையில் இருக்கின்றார்கள். விவசாய விருத்திகளோவென்னில் பருத்தியின் விளைவால் ஐரோப்பியர்கள் செய்யும் நெசுவின் விருத்திகளும், அமேரிக்கர் செய்யுங் கோதுமை விருத்திகளும், ஜப்பானியர்கள் செய்யும் விருட்சவிருத்திகளும், பர்மியர்கள் செய்யும் அரிசியின் விருத்தியும் விவசாயபலனை நன்கு விளக்கும்.

இத்தகைய விருத்திகளை கலாசாலை மாணவர்களுக்குப் போதியாது மதசம்மத நூற்களைப் போதிப்பதாயின் வித்தை புத்தி, யீகை, சன்மார்க்கமற்று சோம்பேறிகளாய் வீதியுலாவவும், சாதிசம்மத நூற்களைப் போதிப்பதாயின் நாளுக்குநாள் பெருக்கிக்கொண்டேவரும் சாதிபேதமென்னும் பொய்க்கட்டுப்பாடுகளினால் ஓர் மனிதன் தனதருகில் வந்தவுடன் அவனைப் பார்க்க கண்ணிருந்தும் மனிதவுருவினனென்றறியும் உணர்ச்சியிருந்தும் அவனை முறுத்துப்பார்த்து நீரென்னசாதி, என்னவருணமெனக் கேட்டு நாளுக்குநாள் ஒற்றுமெய்க்கேடடைவதுடன் விரோதச் சிந்தனையே விருத்தி பெற்று ஒருவருக்கொருவர் உபசாரமென்பதற்றுப் பாழடைந்து போவார்கள்.

இந்துக்களென்போர் தங்கள் மதசம்மதங்களினால் இதுவரையில் அடைந்துவந்த சுகங்களென்ன, சாதி சம்மந்தங்களினால் இதுவரையிலடைந்துவந்த சுகங்களென்ன. ஓர் மனிதன் ஏதேனும் ஓர் வித்தையை நூதனமாகக் கண்டுபிடிப்பானாயின் அவ்வித்தையால் தானும் தனது சந்ததியோரும் சுகச்சீர்பெற்று வாழ்வதுடன் தனது தேசமக்களும் சீவராசிகளும் சுகவாழ்க்கைப்பெறுமாயின் அவ்வித்தையை சிறந்த வித்தையென்று கூறலாம். அங்ஙனமின்றி அவ்வித்தையால் தாங்கள் மட்டிலும் சுகம்பெற்று ஏனையோர்கள் யாவரும் பாழடைவதாயின் அவ்வித்தை மேலான வித்தையென்று விவேகிகளேற்பரோ. ஒருக்காலும் ஏற்கமாட்டார்கள்.

இம்மதசம்மந்தவித்தையும், சாதிசம்மந்தவித்தையும் தங்கடங்கள் சுயப்பிரயோசனங் கருதி ஏற்படுத்திக் கொண்டவைகளாதலின் கற்பனா நூற்களை கலாசாலைகளில் போதிப்பதினால் உள்ளக் கலை நூற்களின் பலனும் கெட்டுப் பாழடைய நேரும். ஆதலின் ஒவ்வோர் கலாசாலைகளிலும் மதசம்மத நூற்களையும், சாதிசம்மத நூற்களையும் மறந்துங் கற்பிக்காமலிருக்க வேண்டுகிறோம்.

- 4:48; மே 10. 1911 -