அறிவுக் கதைகள்/மனித குணம்

விக்கிமூலம் இலிருந்து

97. மனித குணம்

நபிகள் நாயகம் ஒருநாள் மாலைநேரத்தில் பள்ளி வாசலுக்குத் தொழப் போனார்கள். அங்குள்ள தண்ணிரி தொட்டியில் கைகால்களை சுத்தம் செய்யும் பொழுது மரத்திலிருந்து ஒருதேள் தண்ணீர் தொட்டியில் விழுந்து துடியாய் துடித்துக் கொண்டிருந்தது. நாயகம் அவர்கள் இரக்ககுணம் கொண்டு, அத் தேளைத் தரையில் எடுத்துவிடத் தொட்டார்கள். அவ்வளவுதான். தேள் கொட்டி விட்டது. கையில் நெறி ஏறுகிறது. அந்த நிலையிலும் தண்ணியில் நீந்த முடியாமல், உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத் துடியாய் துடிக்கும் தேளின் துன்பத்தைப் பார்த்து, மனம் சகியாமல் மறுபடியும் அதை தண்ணிரிலிருந்து எடுத்து விட முயற்சித்தார்கள்.

உடனே, பக்கத்திலிருந்த அசரத் அபூபக்கர் அவர்கள் “என்ன பெருமானே! தேள், தங்களைக் கொட்டுகிறது; மறுபடியும் அதை எடுத்துவிடப் போகிறீர்களே!” என்று கூறித் தடுத்தார்கள்.

அதற்கு நபிகள் நாயகம் அவர்கள், “நஞ்சுள்ள ஒரு உயிரே தன் குணத்தைக் காட்டத் தவறாதபோது மனிதன் தன் குணத்தைக் காட்டத் தவறலாமா?” என்று கூறிக் கொண்டே இருகைகளாலும் அத்தேளை தண்ணிரோடு சேர்த்து அள்ளி வெளியில் விட்டுவிட்டு, அதற்குப்பின் தொழுகைக்குச் சென்றார்கள் என வரலாறு கூறுகிறது.

இப்போதனை தன்னை மனிதன் என்ற நினைத்துக் கொண்டிருக்கிற ஒவ்வொருவரையும் சிந்திக்கத் தூண்டுகிறது.