அல்லங் கீரனார்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search


அல்லங் கீரனார்[தொகு]

நற்றிணை- 245. நெய்தல்திணை[தொகு]

(குறைநேர்ந்த தோழி தலைமகளை முகம்புக்கது)


நகையா கின்றே தோழி தகைய
அணிமலர் முண்டகத் தாய்பூங் கோதை
மணிமரு ளைம்பால் வண்டுபடத் தைஇ
துணிநீர்ப் பௌவந் துணையோ டாடி
ஒழுகுநுண் ணுசுப்பி னகன்ற வல்குல் (5)
தெளிதீங் கிளவி யாரை யோவென்
அரிதுபுண ரின்னுயிர் வௌவிய நீயெனப்
பூண்மலி நெடுந்தேர்ப் புரவி தாங்கித்
தானம் மணங்குத லறியான் நம்மில்
தானணங் குற்றமை கூறிக் கானற் (10)
சுரும்பிமிர் சுடர்நுதல் நோக்கிப்
பெருங்கடற் சேர்ப்பன் தொழுதுநின் றதுவே.
"https://ta.wikisource.org/w/index.php?title=அல்லங்_கீரனார்&oldid=13098" இருந்து மீள்விக்கப்பட்டது