ஆசிரியர்:நச்சினார்க்கினியர்

விக்கிமூலம் இலிருந்து

நச்சினார்க்கினியர், தமிழில் இலக்கணம், இலக்கியம் ஆகிய இருவகை நூல்களுக்கும் உரை எழுதியவர்.

வரலாறு:[தொகு]

பாண்டிய நாட்டின் தலைநகரமாகிய மதுரையில் வாழ்ந்து வந்தவர். ஆசிரியத் தொழிலை மேற்கொண்டிருந்தவர். பாரத்துவாச கோத்திரத்தவர். பார்ப்பன மரபினர். சிவஞானச் செல்வர்.[1]

உரை எழுதிய நூல்கள்:[தொகு]

  • இலக்கண நூல்: தொல்காப்பியம்
  • இலக்கிய நூல்கள்:
  1. பத்துப்பாட்டு
  2. கலித்தொகை
  3. குறுந்தொகையில் 20 பாடல்கள்
  4. சீவகசிந்தாமணி
  • உரை கண்ட நூல்களைக் குறிப்பிடும் வெண்பா:

"பாரத்தொல் காப்பியமும் பத்துப்பாட் டுங்கவியும்
ஆரக் குறுந்தொகையுள் ஐந்நான்கும் - சாரத்
திருத்தகு மாமுனிசெய் சிந்தா மணியும்
விருத்திநச்சி னார்க்கினிய மே"[2] (குறுந்தொகைக்கான உரை கிடைக்கவில்லை)

நச்சினார்க்கினியரின் புலமை:[தொகு]

    தாம் உரை எழுத எடுத்துக்கொண்ட நூல்களையும் அவற்றிற்குரிய உரைகளையும் பலமுறை பயின்று தெளிவு பெற்றவராக உள்ளார். இலக்கண இலக்கியம் மட்டுமல்லாமல் ஏனைய கலைகளிலும் நிரம்பிய அறிவு பெற்றவர்.[3] இவர் நூல் எதுவும் இயற்றவில்லை. அதற்கு மாறாக வாழ்நாள் முழுமையும் பண்டைத்தமிழ் நூல்களுக்கு உரை காண்பதில் செலவிட்டுள்ளார்.
  1. வண்டிமிர் சோலை மதுரா புரிதனில்
    எண்டிசை விளங்க வந்த ஆசான்
    பயின்ற கேள்வி பாரத் துவாசன்
    நன்மறை துணிந்த நற்பொருள் ஆகிய
    தூய ஞானம் நிறைந்த சிவச்சுடர் (பாயிரம்)
  2. மு.வை.அரவிந்தன், உரையாசிரியர்கள், மணிவாசகர் பதிப்பகம், சென்னை 1995 (மூன்றாம் பதிப்பு) ப.235.
  3. பாற்கடல் போலப் பரந்த நன்னெறி
    நூற்படு வான்பொருள் நுண்ணிதின் உணர்ந்த
    போக்கறு கேள்விப் புலவோர் புலத்தின்
    நாற்பொருள் பொதிந்த தாக்கமை யாப்பினைத்
    தேக்கிய சிந்தையன்" (பாயிரம்)