ஆவூர்கிழார்
Appearance
ஆவூர் கிழார்
[தொகு]ஆவூர் கிழார்
[தொகு]புறநானூறு: 322.
[தொகு]- உழுதூர் காளை யூழ்கோ டன்ன ஊழுது ஊர் காளை ஊழ் கோடு அன்ன
- கவைமுட் கள்ளிப் பொரியரைப் பொருந்திப் கவை முள் கள்ளிப் பொரி அரைப் பொருந்திப்
- புதுவரகு வரிகாற் கருப்பை பார்க்கும் புது வரகு வரி கால் கருப்பை பார்க்கும்
- புன்றலைச் சிறாஅர் வில்லெடுத் தார்ப்பிற் புன் தலைச் சிறாஅர் வில் எடுத்து ஆர்ப்பின்
- பெருங்கட் குறுமுயல் கருங்கல னுடைய (5) பெரும் கண் குறு முயல் கரும் கலன் உடைய
- மன்றிற் பாயும் வன்புலத் ததுவே மன்றில் பாயும் வன் புலத்ததுவே
- கரும்பி னெந்திரஞ் சிலைப்பி னயல கரும்பின் எந்திரம் சிலைப்பின் அயலது ( )
- திருஞ்சுவல் வாளை பிறழு மாங்கட் இரும் சுவல் வாளை பிறழும் ஆங்கண்
- டண்பணை யாளும் வேந்தர்க்குக் தண் பணை ஆளும் வேந்தர்க்குக்
- கண்படை யீயா வேலோ னூரே. (10) கண் படை ஈயா வேலோன் ஊரே.
- குறிப்பு
- இப்பாடல் ஈற்றயலடி முச்சீரான் வந்த “நேரிசை ஆசிரியப்பா” ஆகும்.
ஆவூர்கிழார் சங்க இலக்கியத்துள் பாடிய பாடல் தொகை 1 (ஒன்றுமட்டும்) ஆகும்.
- ( )