ஆவூர்கிழார் மகனார் கண்ணகனார்

விக்கிமூலம் இலிருந்து

ஆவூர் கிழார் மகனார் கண்ணகனார்[தொகு]

அகநானூறு: 202. குறிஞ்சித் திணை[தொகு]

இரவுக்குறிக்கண் வந்து நீங்கும் தலைமகற்குத் தோழி சொல்லி வரைவு கடாயது.


வயங்குவெள் ளருவிய குன்றத்துக் கவாஅற் வயங்கு வெள் அருவிய குன்றத்துக் கவாஅன்
கயந்தலை மடப்பிடி யினனே மார்ப்பப் கயம் தலை மடப் பிடி இனன் ஏமார்ப்பப்
புலிப்பகை வென்ற புன்கூர் யானை புலிப் பகை வென்ற புன் கூர் யானை
கல்லகச் சிலம்பிற் கையெடுத் துயிர்ப்பி கல் அகம் சிலம்பின் கை எடுத்து உயிர்ப்பின்
னல்லிணர் வேங்கை நறுவீ கொல்லன் (5) நல் இணர் வேங்கை நறு வீ கொல்லன்
குருகூது மிதியுலைப் பிதிர்விற் பொங்கிச் குருகு ஊது மிதி உலைப் பிதிர்வின் பொங்கிச்
சிறுபன் மின்மினி போலப் பலவுடன் சிறு பல் மின் மினி போலப் பலவுடன் ( )
மணிநிற யிரும்புதற் றாவு நாட மணி நிற இரும் புதல் தாவு நாட
யாமே யன்றியு முளர்கொல் பானா யாமே அன்றியும் உளர்கொல் பால் நாள்
ளுத்தி யரவின் பைத்தலை துமிய (10) உத்தி அரவின் பை தலை துமிய
வுரவுரு முரறு முட்குவரு நனந்தலைத் உரவு உரும் உரறும் உட்கு வரு நனம் தலைத்
தவிர்வி லுள்ளமொ டெஃகுதுணை யாகக் தவிர்வு இல் உள்ளமொடு எஃகு துணை ஆகக்
கனையிருள் பரந்த கல்லதர்ச் சிறுநெறி கனை இருள் பரந்த கல் அதர்ச் சிறு நெறி
தேராது வரூஉம் நின்வயி தேராது வரூஉம் நின் வயின் ( )
னாரஞ ரரும்படர் நீந்து வோரே. (15) ஆர் அஞர் அரும் படர் நீந்துவோர் ஏ.
( )
குறிப்பு
இப்பாடல் ஈற்றயலடி முச்சீரான் வந்த நேரிசை ஆசிரியப்பா ஆகும்.
சங்க இலக்கியத்தொகையுள் “ஆவூர் கிழார் மகனார் கண்ணகனார்” பாடிய பாடல் தொகை 1 (ஒன்றுமட்டும்) ஆகும்.


பார்க்க[தொகு]

அகர வரிசையில் சங்க இலக்கியம்