இரண்டாம் இராசேந்திர சோழன் மெய்க்கீர்த்தி

விக்கிமூலம் இலிருந்து

இரண்டாம் இராசேந்திர சோழன் மெய்க்கீர்த்தி[தொகு]

திருமாது புவியெனும் பெருமாத ரிவர்தன்
மாதே வியர்க ளாக மீதொளிர்
வெண்குடை யுயர்த்துத் திண்கலி பெயர்த்துத்தன்
சிறிய தாதை யாகிய வெறுழ்வலிக்
கங்கைகொண்ட சோழனைப் பொங்கிகல்
இருமுடிச் சோழ னென்றும் பெருமுரட்
டன்றிருத் தம்பியர் தம்முள் வென்றிகொள்
மும்முடிச் சோழனைத் தெம்முனை யடுதிறற்
சோழ பாண்டிய னென்றுங் கோழிமன்
றொடுகழல் வீர சோழனைப் படிபுகழ் (10)
கரிகால சோழ னென்றும் பொருதொழில்
வாள்வலித் தடக்கை மதுராந்தகனைச்
சோழகங்க கொன்றுந் தோள்வலி
மேவிகல் பராந்தக தேவனைச் சோழ
வயோத்திய ராச னென்றும்
இருதயத் தன்பொடு கருது காதலருள்
இத்தலம்புக ழிராசேந்திர சோழனை
உத்தம சோழ னென்றத் தொத்தணி
முகையவி ழலங்கன் முடிகொண்ட சோழனை
இகல்விச யாலய னென்றும் புகர்முகத் (20)

[தொகு]

தேழுயர் களிற்றுச் சோழகே ரளனை
வார்சிலைச் சோழ கேரள னென்றுந்
திண்டிரற் கடாரங் கொணட சோழனைத்
தினகரன் குலத்துச் சிறப்பமர் சோழ
சனக ராச னென்றுங் கனைகடற்
படிகொண்ட பல்புகழ் முடிகொண்ட சோழனைச்
சுந்தர சோழ னென்றுஞ் செந்தமிழ்ப்
பிடிகளிற் றிரட்ட பாடி கோண்ட
சோழனைத் தொல்புவி யாளுடைச் சோழ
கன்னகுச் சியராச னென்றும் பின்னுந்தன் (30)
காதலர் காதலர் தம்முள் மேதகு
கதிராங் கனைகழல் மதுராந் தகனை
வெல்படைச் சோழ வல்லப னென்றும்
மானச் சிலைக்கையோ ரானைச்சே வகனை
நிருபேந்திர சோழ னென்றும் பருமணிச்
சுடர்மணி மகுடஞ் சூட்டிப் படிமிசை
நிகழு நாளினு ளிகல்வேட் டெழுந்துசென்
றொண்டிற லிரட்ட மண்டல மெய்தி
நதிகளும் நாடும் பதிகளு மநேகம்
அழித்தனன் வளவனெனு மொழிப்பொருள் கேட்டு (40)

[தொகு]

வேகவெஞ் சளுக்கிய ஆகவ மல்லன்
பரிபவ மெனக்கிதென் றெரிவிழித் தெழுந்து
செப்பருந் தீர்த்தக் கொப்பத் தகவையிற்
சென்றெதி ரேன்றமர் தொடங்கிய பொழுதவன்
செஞ்சர மாரிதன் குஞ்சர முகத்தினுந்
தன்திருத் துடையினுங் குன்றுறழ் புயத்தினுந்
தைக்க வுந்தன் னுடன்களி றேறிய
தொடுகழல் வீரர்கள் மடியவும் வகையா
லொருதனி யநேகம் பொருபடை வழங்கியம்
மொய்ம்பமர் சளுக்கி தம்பிசய சிங்கனும் (50)
போர்ப்புல கேசியுந் தார்த்தச பன்மனு
மானமன்னவரின் மண் டலியசோ கையனும்
ஆனவன் பகழா ரையனுந் தேனிவர்
மட்டவி ழலங்கல் மொட்டையனுந் திண்டிறல்
நன்னி நுளம்பனு மெனுமிவர் முதலினர்
எண்ணிலி யரைசரை விண்ணகத் தேற்றி
வனினிய ரேவனும் வயப்படைத் துத்தனும்
கொன்னவில் படைக்குண்ட மய்யனு மென்றின
வெஞ்சின வரைசரோ டஞ்சிச் சளுக்கி
குலங்குலை குலைந்து தலைமயிர் விரித்து (60)

[தொகு]

வெந்நுற் றொளித்துப் பின்னுற நோக்கிக்
கால்பரிந் தோடி மேல்கடற் பாயத்
துரத்திய பொழுதச் செரு்க்களத் தவன்விடு
சத்துருபயங் கரன்கர பத்திரன் மூல
பத்திர சாதி பகட்டரை சநேகமும்
எட்டுநிரை பரிகளு மொட்டக நிரைகளும்
வராகவெல் கொடிமுத லிராசபரிச் சின்னமும்
ஒப்பில்சத்தி யவ்வை சாங்கப்பையென் றிவர்முதல்
தேவியர் குழாமும் பாவைய ரீட்டமு
மினையன பிறவு முனைவயிற் கொண்டு (70)
விசையா பிடேகம் செய்துதென் றிசைவயிற்
போர்ப்படை நடாத்திக் கார்க்கட லிலங்கையில்
விறற்படைக் கலிங்கர்மன் வீரசலா மேகனைக்
கடகளிற் றொடுபடக் கதிர்முடி கடிவித்
திலங்கையர்க் கிறைவன் மானா பரணன் (75)
காதல ரிருவரைக் களத்திடைப் பிடித்து
மாப்பெரும்புகழ் மிகவளர்த்த கோப்பரகேசரி வர்மரான
உடையார் ஸ்ரீராசேந்திர தேவர்க்கு யாண்டு...
[]]
மெய்க்கீர்த்திகள் :[[]] :[[]] :[[]]