இலக்கிய பஞ்சகம்
Jump to navigation
Jump to search
கவிமணியின் கவிமலர்கள்[தொகு]
ஆசிரியர்: கவிமணி[தொகு]
இலக்கியப் பஞ்சகம்[தொகு]
1. வள்ளுவர் தந்த திருமறையைத் - தமிழ்
- மாதின் இனிய உயிர்நிலையை
- உள்ளம் தெளிவுறப் போற்றுவமே - நூலின்
- உத்தம ராகி ஒழுகுவமே.
2. பாவின் சுவைக்கடல் உண்டெழுந்து - கம்பன்
- பாரிற் பொழிந்ததீம் பாற்கடலை
- நாவின் இனிக்கப் பருகுவமே - நூலின்
- நன்னயம் முற்றுந் தெளிகுவமே.
3. தேனிலே ஊறிய செந்தமிழின் - சுவை
- தேரும் சிலப்பதிகாரம் அதை
- ஊனிலே எம்முயிர் உள்ளளவும் - நிதம்
- ஓதி யுணர்ந்தின் புறுவோமே.
4. கற்றவர் மெச்சும் கலித்தொகையாம் - இன்பக்
- கற்பனை சேருங் களஞ்சியத்தை
- முற்ற அளந்து தெரிவோமே - காதல்
- மூழ்கும் துறைகண்டு வாழ்வோமே.
5. பண்டை இயற்கை வளங்களெல்லாம் - பத்துப்
- பாட்டின் வளத்தினிற் கண்டறிந்து
- மண்டல மெங்கும் கமழும் அருந்தமிழ்
- வாசம் நுகர்ந்து மகிழ்வோமே.
கவிமணியின் கவிமலர்கள்[தொகு]
- பார்க்க
- பக்தி மஞ்சரி
- அழகம்மை ஆசிரியவிருத்தம்
- கவிதை
- பாரதி
- கம்பன்
- மனோன்மணீயம் சுந்தரனார்
- திருவள்ளுவர்
- ஆறுமுக நாவலர்
- இலக்கிய பஞ்சகம்