உள்ளடக்கத்துக்குச் செல்
உறந்தைவளர் நாட்டுவளப்பம்/பறவைகள் பாடுதல்
- பித்தர் குரும்பரங்கே லட்சத்தோப்பில் வந்ததும்
- கரும்பு கதலிதென்னை கமுக இளந்தோப்பில்
- வருந்தாது வண்டுகள் மலர்கள் மலர்ந்திட
- வருந்தூது கோவில்எங்கள் உறந்தை வளநாட்டில்
- கோகிலமும் அன்னமும் குயிலும்பு றாக்களும்
- வாகனத்து மேலேமுத்து மாரிவரப் பாடுது
- தோரணசிங் காதனங்கள் சோதிக்கப் பாடுது
- மாதவனைப் போலுறந்தை வாழ்ந்திருக்கப் பாடுது
- என்னென்ன சொல்லுது ஏலங் கருங்குயில்
- வர்ணங்கள் சிந்துவகை வகையாகப் பாடுது
- விர்த்தங் கலித்துறை வெண்பாக்கள் சொல்லுது
- சிந்துகள் கேட்கவென்று வந்தார்உ றந்தையில்
- இந்தா வரங்களென்று தந்தாள்பெ ரியவள்
-