உறந்தைவளர் நாட்டுவளப்பம்/பறவைகள் பாடுதல்

விக்கிமூலம் இலிருந்து
பித்தர் குரும்பரங்கே லட்சத்தோப்பில் வந்ததும்
கரும்பு கதலிதென்னை கமுக இளந்தோப்பில்
வருந்தாது வண்டுகள் மலர்கள் மலர்ந்திட
வருந்தூது கோவில்எங்கள் உறந்தை வளநாட்டில்
கோகிலமும் அன்னமும் குயிலும்பு றாக்களும்
வாகனத்து மேலேமுத்து மாரிவரப் பாடுது
தோரணசிங் காதனங்கள் சோதிக்கப் பாடுது
மாதவனைப் போலுறந்தை வாழ்ந்திருக்கப் பாடுது
என்னென்ன சொல்லுது ஏலங் கருங்குயில்
வர்ணங்கள் சிந்துவகை வகையாகப் பாடுது
விர்த்தங் கலித்துறை வெண்பாக்கள் சொல்லுது
சிந்துகள் கேட்கவென்று வந்தார்உ றந்தையில்
இந்தா வரங்களென்று தந்தாள்பெ ரியவள்