உறந்தைவளர் நாட்டுவளப்பம்/மன்னன் வருகை

விக்கிமூலம் இலிருந்து
துரந்தரனைத் தஞ்சைவளர் சோழ முசுகுந்தன்
புரந்தரனைக் காண்பதற்கு உறந்தையில் கந்ததும்
வந்தார்கள் தென்னுறந்தை வாழுமே ழுநாட்டார்
உம்பஅ அம்பலம் ஊர்மானி யங்களும்
வந்தகா ரியமாகச் சந்தோஷ மாய்ச்சென்று
தென்புறத் திலேலிருந்து சோறுண்டு வாருங்கள்
நீதிமந் திரியுடன் யூகமந் திரியும்
யூகிமந் திரியுடன் வாசல்மந் திரியும்


வாசல்மந் திரிநாட்டுச் சேதிஉ ரைத்ததும்
வீர மணவாளரைச் சோழ ரழைத்ததும்
வா ருமிரும் என்றூப சாரங்கள் சொன்னதும்
அந்திக் கொலுவிலும் ஆசார வாசலும்
சந்திப் பூக்கொண்டு தயிரிப்பூப் பெற்றார்கள்


பயிர்வேதி மெய்யுடனே கதிர்சாவி பேர்களும்
மன்னன் மலையரசன் வாழுமே ழுநாட்டார்
செந்நெல்லும் முத்தும்சி றந்துவி ளைந்ததும்
கார்நெல்லும் நெல்லும் கலந்துவி ளைந்ததும்
நெல்லுட னேபுஞ்சை நிறைந்துவி ளைந்ததும்
விளைந்தது செந்நெல்முத்து அளந்துத ருகின்றோம்