உறந்தைவளர் நாட்டுவளப்பம்/வீரமணவாளர் பெற்ற சிறப்புகள்

விக்கிமூலம் இலிருந்து
வளந்தேறி வாழுமெங்கள் உறந்தை வளநாட்டில்
அறிவில் மிகுந்தவர் வீர மணவாளர்
பெறுவார் பெறுவாரென்று சிவந்திரங்க ளுரைத்ததும்
உம்பளம் அம்பலம் ஊர்மானியங்களும்
கோவில்மா னியமும்கு ருக்கள்மா னியமும்
காளிமானி யமும்முத்து மாரிமா னியமும்
பிள்ளையார் மானியம்பெ ருமாள்மா னியமும்
அய்ய னார்மானியம் அரசுகு றுணியும்
கோவில்கு றுணியும்கு ருக்கள்கு றுணியும்
பிள்ளை யார்களுக்கு முன்னேகு றுணியும்
பெருமாள் குறுணியுடன் ருசுவாகச் சொல்கிறேன்
மூலைக் கதிருண்டு முடுக்குக் கதிருண்டு
வெள்ளைக் கதிருடனே பிள்ளை யரியுண்டு
கட்டுக் களங்கள் களவடி செவ்வடி
பொட்டிக் கதிரும்பண்ணைக் கட்டுக் கலமுண்டு
அட்ட வணைக்கணக்கைக் கிட்டே அழைத்ததும்
விட்டுவிடு கிறோமென்று கட்டளை விட்டதும்
ஆறில் ஒருவாரம் ஏழு குறுணியும்
பூரணி வாங்கிவந்தார் வீர மணவாளர்
சாலுவை சாலுவை சரிகைமுண் டாசியும்
போருவை துப்பட்டா பெரிய பீதாம்பரம்
நாலு வகையும்வெகு மானங்கள் செய்ததும்
வீரமண வாளரே ஊரேபோய் வாருங்கள்
நாடுசி றந்ததுடன் நல்லச பைகளும்
ஊரு சிறந்ததுடன் உயர்ந்தமா நியமும்
அரைக்காரச் செம்புருதி அட்டவளை அய்யரைக்
கூட்டுக் கொண்டு உறந்தை நாட்டார் வரச்சொன்னார்
அந்தக் கணமேநாலு தண்டக்கா ரோடியே
அந்தக் கணமேகூட்டம் அழைத்துவந் தார்களாம்
வந்தகா கிதவோலை வாசகம் செய்ததும்