கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/01

விக்கிமூலம் இலிருந்து

1. பிரிட்டிஷ் மந்திரிக்குப் பதில்
கோமகன் மன்னிப்புக் கேட்டார்!

உலக நாடுகளில் பலவிதமான ஆட்சிகள் நடந்தன; நடைபெறுகின்றன. அவை எவை? எந்த ஆட்சிக்காகக் கவிக்குயில் சரோஜினி இங்கிலாந்து நாட்டிலே போராடினார் என்பதை பார்ப்போம்.

★ ஆள்பவர் இல்லாமல் நடக்கும் ஆட்சி; அதாவது அதற்கு அராஜக ஆட்சி Anarchy; என்று பெயர்!

★ 'உயர்குடி மக்கள் ஆட்சி' Aristocracy; என்ற ஓர் ஆட்சி உண்டு!

★ ஏக ஆட்சி அதாவது தன்னாட்சி Autarchy என்ற பெயருடைய ஆட்சி ஒன்று இருந்தது!

★ ஏகாதிபத்தியம் ஆட்சி, அல்லது தன்னரசு என்ற பெயரில் Autocracy ஒன்று நடந்தது.

★ குடியாட்சி அல்லது ஜனநாயக ஆட்சி Democracy என்ற ஆட்சியில் நாம் இன்று வாழ்கின்றோம்.

★ இரட்டை ஆட்சி என்ற பெயரில் கி.பி. 1921-ம் ஆண்டு இந்தியாவில் Dyarchy நடைபெற்றது.

★ சர்வாதிகாரம் என்ற பெயரில் Dictatorship ஆட்சிகள் நடந்ததை நாம் வரலாற்றில் படிக்கின்றோம்!

★ Dyarchy என்ற இரு வகை ஆட்சி கிரேக்க நாட்டில் நடந்துள்ளதாகச் சரித்திரம் கூறுகின்றது.  ★ தொழிலாளர்களால் நடத்தப்பட்ட ஆட்சிக்கு Ergatocracy என்று பெயர்!

★ பிரெஞ்சு நாட்டிலும், ஜெர்மனியிலும், Georontociacy என்ற முதியோர்களால் ஓர் ஆட்சி நடந்தது!

★ முற்றும் துறந்த சாதுக்கள் ஆட்சி என்ற ஆட்சி ஒன்று Hagiarchy நடந்ததாக வரலாறு சுட்டுகின்றது.

★ பண்டைய காலத்தில் பல நாடுகளில் முடியாட்சிகள் Monarchy சில நடந்துள்ளதையும் படித்துள்ளோம்!

★ சமுதாய விரோதிகள் என்று கூறப்படும் காவிகள் கூட Ochiocracy என்ற பெயரால் ஓராட்சியை நடத்தி இருக்கிறார்கள்!

★ சமுதாய முக்கியஸ்தர்கள் பலரால், பொறுப்பான ஓர் ஆட்சி Oligarchyயை நடத்திக்காட்டப்பட்டிதாக உலக வரலாற்றால் உணர்கின்றோம்.

★ செல்வச் சீமான்களும், கோமான்களுமாகச்சேர்ந்து அணிதிரட்டி tutocracy என்ற பெயரில் ஓர் பணக்கார ஆட்சியை நடத்தியுள்னார்கள்.

★ நமது இந்தியா இப்போது Republic என்ற ஜனநாயக குடியாட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது.

★ மாவீரர்களான லேனினும், பிறகு சிறுசிறு மாற்றங்களோடு ஸ்டாலினும், Soviet சோவியத் ருஷ்ய முறையில் உழைப்பாளிகளின் என்ற ஆட்சியை நடத்தியதை நாம் பார்த்திருக்கிறோம்-படித்திருக்கிறோம்.

★ மூன்றாம் நெப்போலியனுக்குப் பிறகு, பிரான்ஸ் நாட்டு மதச் சார்பாளர்களும், முதியவர்களும் இணைந்து நடத்திக் கொண்ட ஆட்சிக்கு Thocracy தெய்வீக ஆட்சி என்று கூறிக் கொண்டார்கள். 

  • இன்றைய பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷ்ரத், இட்லர் முசோலினி போன்றோரது ஆட்சியை மக்கள் Tyranny ஆட்சி என்று பெயரிட்டு அழைக்கிறார்கள்.

இத்தகைய ஆட்சிகளைப் பற்றிய வரலாறுகளை எல்லாம் நன்குணர்ந்த கவிக்குயில் சரோஜினி தேவி, தனது உடல்நலம் சரி இல்லாமல் சிகிச்சைப் பெற்றுக் கொண்டு இலண்டன் மாநகரில் உள்ள ‘கிங்ஸ்லீ’ என்ற மாமன்றத்தில் சொற்பொழிவு ஆற்றும் வாய்ப்பு ஒன்று வாய்த்தது.

அந்த நேரத்தில், பஞ்சாப் மாநிலத்தில் ஜாலியன் வாலா பாக் என்ற இடத்தில், ஆங்கிலேயர்கள் அரசு நடத்திய ‘பஞ்சாப் படுகொலை’யைப் பற்றி மிக கோபாவேசத் தேசப்பற்றுடன் சரோஜினி தேவி முழக்கமிட்டார்.

அக்கூட்டத்தில் ஆங்கிலேயரும்-இந்தியரும் பெருந்திரளாகக் கூடி இருந்தார்கள். அந்த மாமன்ற பேச்சில் கவியரசி சரோஜினி தேவி குமுறிக் கொந்தளித்து ஆற்றிய உரையில்:

"குடிகளைக் கொடி விலங்குகள் போல் வேட்டை ஆடலாமா? நிரபராதிகளையும், நிராயுதபாணிகளையும், சுட்டேன், சுட்டேன், துப்பாக்கிகளுள் இருந்த வெடி குண்டுகள் தீரும் வரைச் சுட்டேன்." என்று போர் வெறியன் ஜெனரல் பயர் சுட்டானே! இது அராஜக ஆட்சியின் அடக்குமுறைப் போர் ஆர்ப்பாட்ட வெறி அல்லவா?”

”இது நியாயமா? பிரிட்டிஷாரின் வீரம் இதுதானா? ஆங்கிலேய ஆட்சியின் ஜனநாயகம் இதுதான் பெண்களுக்குரிய மரியாதைகளை வழங்குகிறோம் என்று கூறும் பிரிட்டிஷ் ஆரசு, பெண்மணிகளை நிர்வாணமாக்கி நிறுத்தலாமா?”

"கசையடிகளால் பெண்களைக் கதறக் கதற அடிக்கலாமா அவர்களை வீதியிலே நிறுத்திக் கற்பழிக்கலாமா எனது நாட்டுச் சகோதரிகளை மானபங்கம் செய்த சண்டாளர்களை, பிரிட்டிஷ் ஆட்சி தண்டிக்காமல் விட்டது ஏன்?"

இப்படிப்பட்ட பயங்கரக் காட்டுமிராண்டித்தனம் செய்த டயர் என்பவனது அராஜகத்தைப் பிரிட்டிஷ் பாராளுமன்றம் பாராட்டலாமா? நீதியா அது?”

அப்போது கூட்டத்தில் இருந்த மக்கள் வெட்கம், வெட்கம் என்று ஓங்காரக் குரலிட்டு முழக்கமிட்டார்கள். பேச்சைக் கேட்க வந்த வெள்ளைக்காரர்கள் பலர் தேவியின் வீர உரையால் எழுந்த கோஷங்களைக் கேட்டுத் தலைகுனிந்து வெளியேறினார்கள்.

இந்தியாவில் பிரிட்டிஷ் செய்யும் ஆட்சியைப் பற்றி வெள்ளையர்களிடம் அதுவரை ஒரு நல்ல எண்ணம் இருந்தது. சரோஜினி தேவியின் அந்த கடல் கொந்தளிப்பான உரை, பிரிட்டிஷ் ஆட்சியை நிலை குலைய வைத்த கெட்டப் பெயரை உருவாக்கி விட்டதை அன்று லண்டன் மாநகரமே பெருமூச்சு விட்டு அவமானம் அடைந்தது. இத்தகைய ஓர் ஆட்சியை அம்பலப்படுத்ததான் உலகில் நடைபெற்ற பல வகையான ஆட்சிகளைப் பற்றி தேவி விமர்சனம் செய்தார்!

பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் அன்று இந்திய மந்திரியாக இருந்தவர் மாண்டேரு என்ற ராஜதந்திரி! அவர், சரோஜின் தேவியை நோக்கி, நீங்கள் மேடையில் பொய்க் குற்றச்சாட்டுக்களைக் கூறியதற்காக அவற்றை மீண்டும் வாபஸ் பெற்று, மன்னிப்புக் கேட்க வேண்டும் என்ற அறை கூவலை விட்டார்!

சரோஜினி தேவி அந்த அறைகூவலை ஏற்று, ஆவர் வார்த்தைகளுக்குத் தக்கக் கடிதம் எழுதி மறுத்தார். அப்போது, கானாட்டுக்கோமகன் இந்தியாவிற்குவரும் வாய்ப்பு ஏற்பட்டு, இந்தியர்களின் கொந்தளிப்பான மன எழுச்சிகளைப் பார்த்து, இந்தியர்க்கு ஆறுதலாக நடந்ததை மறந்து விடுங்கள்; பிரிட்டிஷ் ஆட்சியின் சார்பில் நான் மன்னிப்புக் கேட்கிறேன்" என்று மன்னிப்புக் கேட்டார்.

ஆஸ்திரேலிய நாட்டு மக்கள் இடையே ஒரு கருவி இருந்தது. அதற்கு ‘பூமரெங்க்’ என்று பெயர் அது மரத்தால் செய்யப்பட்ட ஒரு வளையம். அதன் முனைப் பகுதி வளைவுடையது. எந்த இடம் நோக்கி அதை வீசுகிறார்களோ, அங்கே சென்று எதிரியைத் தாக்கிவிட்டு மீண்டும் அந்த வளையம் வீசியரிடமே வந்து சேரும். இதற்குத்தான் Boomarang என்று ஆங்கிலத்திலே கூறுவார்கள்.

அந்த கருவி போல், பிரிட்டிஷ் மந்திரி வீசிய பூமரெங்க் கருவியை, சரோஜினி மீது 'பொய்க்குற்றச் சாட்டு' என்று கூறி ஏவினார்! சரோஜினி குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதும், அதே கருவி மீண்டும் அந்த மந்திரியையே திருப்பித் தாக்குவதைப் போல, கானாட்டுக் கோமகன் இந்தியா வருகை தந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டதால், சரோஜினி தேவியை அது தாக்காமல் திரும்பி, பிரிட்டிஷ் மந்திரி மாண்டேகுவையை திருப்பித் தாக்கியது.

பிரிட்டிஷ் அரசிடம் சரோஜினி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றார் இந்திய மந்திரி மாண்டேகு. ஆனால், அதற்கு மாறாக, இந்தியாவிடம் மன்னிப்பு கேட்டது பிரிட்டிஷ் அரசு இந்த சாதனையில், ‘பூமரெங்’ என்ற பிரிட்டிஷ் மந்திரிகணையே சரோஜினி தேவியிடம் தோல்வி கண்டது; வெற்றி தேவிக்குத்தான் கிடைத்தது!