கவியகம், வெள்ளியங்காட்டான்/வாழ்த்து

விக்கிமூலம் இலிருந்து

 

முதலாவது

உறவுறல்

 
வாழ்த்து

எமதகந்தனை ஏங்க வைத்திடும்
இருள கன்றிடவே
தமிழெனும்பெய ராலொ ளிர்ந்திடும்
தனித்தி ருவிளக்கே!

சிறிய வயதி லிருந்தி யல்பாய்ச்
செவிவழிபுகுந்தே
அறிவுப் பசியை யாற்று மினிய
அருஞ்சு வையமுதே!

எனது யானெனும்செ ருக்கின்
இன்னல் பிணிகளை
மனமெனும்நறு மலர்ம ணம்பெற
மாற்றும் நன்ம ருந்தே!

நீடும் வாழ்விந் நிலத்தி லென்றும்
நிலைபெ றாமலே
வாடும் மனிதப் பயிர்வ ளர்ந்திட
வழங்கும் தண்முகிலே!

விதிய லைகளி னால்பெ ருந்துயர்
விளைந்தி டாமலே
புதுநிழல்கரை தனிலொ துங்கிடப்
புகும்து ணைப்படகே!

புதிய போதப் புகழ்வ டிவினில்
புலன்து லங்கிடவே
இதய வாவி தனிலி லங்கி இ
னிய தாமரையே!

ஊழி யூழி காலம் உண்மைக்
குறைவி டமாகி
வாழி செந்தமி ழேயுன் சேய்கள்
வாழ்வு யர்ந்திடவே!