குறுந்தொகை 101 முதல் 110 முடிய

விக்கிமூலம் இலிருந்து

குறுந்தொகை 101 முதல் 110 முடிய[தொகு]

பாடல் 101 (விரிதிரை)[தொகு]

நெய்தல்திணை
தலைவன் கூற்று

விரிதிரைப் பெருங்கடல் வளைஇய வுலகமும் விரி திரைப் பெருங் கடல் வளைஇய உலகமும்

அரிதுபெறு சிறப்பிற் புத்தே ணாடும் அரிது பெறு சிறப்பின் புத்தேள் நாடும்

இரண்டுந் தூக்கிற் சீர்சா லாவே இரண்டும் தூக்கின் சீர் சாலாவே

பூப்போ லுண்கட் பொன்போன் மேனி பூப் போல் உண்கண் பொன் போல் மேனி

மாண்வரி யல்குற் குறுமக மாண் வரி அல்குல் குறுமகள்

டோண்மாறு படூஉம் வைகலொ டெமக்கே. தோள் மாறுபடூஉம் வைகலொடு எமக்கே.


என்பது, 1.தலைமகட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது.(பாங்காயினார்= தோழி முதலானோர்)
2.வலித்த நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியதூஉமாம். வலித்த நெஞ்சு= பொருள் தேடுவதற்காகத் தலைவியைப்பிரிந்து செல்லும்படி தூண்டிய நெஞ்சு; செலவழுங்கியது= செல்லுவதை நிறுத்தியது.)
பாடியவர்
பரூஉமோவாய்ப் பதுமன்

பாடல் 102 (உள்ளினுள்ளம்)[தொகு]

பாலைத்திணை
தலைவி கூற்று
உள்ளி னுள்ளம் வேமே யுள்ளா உள்ளின் உள்ளம் வேமே உள்ளாது
திருப்பினெம் மளவைத் தன்றே வருத்தி இருப்பின் எம் அளவைத்து அன்றே வருத்தி
வான்றோய் வற்றே காமம் வான் தோய்வு அற்றே காமம்
சான்றோ ரல்லரியா மரீஇ யோரே. சான்றோர் அல்லர் யாம் மரீஇயோரே.
என்பது, ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி,'யான் யாங்ஙனம் ஆற்றுவேன்?' என்றது.
பாடியவர்
ஒளவையார்.

பாடல் 103 (கடும்புன)[தொகு]

தலைவி கூற்று

கடும்புன றொகுத்த நடுங்கஞ ரள்ளற் // கடும் புனல் தொகுத்த நடுங்கு அஞர் அள்ளல்

கவரித ழன்ன தூவிச் செவ்வா // கவர் இதழ் அன்ன தூவி செவ்வாய்

யிரைதேர் நாரைக் கெவ்வ மாகத் // இரை தேர் நாரைக்கு எவ்வம் ஆக

தூஉந் துவலைத் துயர்கூர் வாடையும் // தூஉம் துவலை துயர் கூர் வாடையும்

வாரார் போல்வர்நங் காதலர் // வாரார் போல்வர் நம் காதலர்

வாழேன் போல்வ றோழி யானே. // வாழேன் போல்வல் தோழி யானே.

என்பது, பருவங்கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
பாடியவர்
வாயிலான் தேவன்.

பாடல் 104 (அம்மவாழி)[தொகு]

தலைவி கூற்று


அம்ம வாழி தோழி காதலர்அம்ம வாழி தோழி காதலர்

நூலறு முத்திற் றண்சித ருறைப்பக்நூல் அறு முத்தின் தண் சிதர் உறைப்ப

தாளித் தண்பவர் நாளா மேயும்தாளி தண் பவர் நாள் ஆ மேயும்

பனிபடு நாளே பிரிந்தனர்பனி படு நாளே பிரிந்தனர்

பிரியு நாளும் பலவா குவவே.பிரியும் நாளும் பல ஆகுவவே


என்பது, 1. பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குக் கூறியது.

2. "சிறிய வுள்ளிப் பெரிய மறக்கவேண்டாவோ" வென்ற தோழிக்குக் கிழத்தி கூறியதூஉமாம்.

பாடியவர்
காவன்முல்லைப் பூதனார்.

பாடல் 105 (புனவன்)[தொகு]

தலைவி கூற்று

புனவன் றுடவைப் பொன்போற் சிறுதினைக் புனவன் துடவை பொன் போல் சிறு தினை

கடியுண் கடவுட் கிட்ட செழுங்குரல்கடி உண் கடவுட்கு இட்ட செழு குரல்

அறியா துண்ட மஞ்ஞை யாடுமகள்அறியாது உண்ட மஞ்ஞை ஆடு மகள்

வெறியுறு வனப்பின் வெய்துற்று நடுங்கும்வெறி உறு வனப்பின் வெய்துற்று நடுங்கும்

சூர்மலை நாடன் கேண்மைசூர் மலை நாடன் கேண்மை

நீர்மலி கண்ணொடு நினைப்பா கின்றேநீர் மலி கண்ணொடு நினைப்பு ஆகின்றே.

என்பது, வரைவு நீட்டித்த விடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
பாடியவர்
நக்கீரர்.

பாடல் 106 (புல்வீழிற்றி)[தொகு]

தலைவி கூற்று
புல்வீ ழிற்றிக் கல்லிவர் வெள்வேர்
புல் வீழ் இற்றி கல் இவர் வெள் வேர்
வரையிழி யருவியிற் றோன்று நாடன்
வரை இழி அருவியின் தோன்றும் நாடன்
தீதி னெஞ்சத்துக் கிளவி நம்வயின்
தீது இல் நெஞ்சத்து கிளவி நம் வயின்
வந்தன்று வாழி தோழி நாமும்
வந்தன்று வாழி தோழி நாமும்
நெய்பெய் தீயி னெதிர்கொண்டு
நெய் பெய் தீயின் எதிர்கொண்டு
தான்மணந் தனையமென விடுகந் தூதே.
தான் மணந்தனையம் என விடுகம் தூதே
என்பது, தலைமகன் தூதுகண்டு கிழத்தி தோழிக்குக் கூறியது.
பாடியவர்
கபிலர்


பாடல் 107 (குவியிணர்த்)[தொகு]

தலைவி கூற்று
குவியிணர்த் தோன்றி யொண்பூ வன்ன
குவி இணர் தோன்றி ஒள் பூ அன்ன
தொகுசெ நெற்றிக் கணங்கொள் சேவல்
தொகு செ நெற்றி கணம் கொள் சேவல்
நள்ளிருள் யாமத் தில்லெலி பார்க்கும்
நள் இருள் யாமத்து இல் எலி பார்க்கும்
பிள்ளை வெருகிற் கல்கிரை யாகிக்
பிள்ளை வெருகிற்கு அல்கு இரை ஆகி
கடுநவைப் படீஇயரோ நீயே நெடுநீர்
கடு நவை படீஇயரோ நீயே நெடு நீர்
யாண ரூரன் றன்னொடு வதிந்த
யாணர் ஊரன் தன்னொடு வதிந்த
ஏம வின்றுயி லெடுப்பி யோயே
ஏம இன் துயில் எடுப்பியோயே
என்பது, பொருள் முற்றி வ்ந்த தலைமகனையுடைய கிழத்தி காமமிக்க கழிபடர் கிளவியாற் கூறியது.
(முற்றி= முதிர்ந்து; காமமிக்க கழிபடர் கிளவி= காமம் மிகப்பெற்றுப் பெருந்துன்பமுற்ற நிலையில் கூறும் சொல்)


பாடியவர்
மதுரைக் கண்ணனார்


பாடல் 108 (மழைவிளை)[தொகு]

தலைவி கூற்று
மழைவிளை யாடுங் குன்றுசேர் சிறுகுடிக்
மழை விளையாடும் குன்று சேர் சிறு குடி
கறவை கன்றுவயிற் படரப் புறவிற்
கறவை கன்று வயின் படர புறவில்
பாசிலை முல்லை யாசில் வான்பூச்
பசு இலை முல்லை ஆசு இல் வான் பூ
செவ்வான் செவ்வி கொண்டன்
செ வான் செவ்வி கொண்டன்று
றுய்யேன் போல்வ றோழி யானே
உய்யேன் போல்வல் தோழி யானே
என்பது பருவங்கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குக் கூறியது
பாடியவர்
வாயிலான்றேவன்


பாடல்:109 (முடக்காலிறவின்)[தொகு]

தோழி கூ்ற்று
முடக்கா லிறவின் முடங்குபுறப் பெருங்கிளை
முடம் கால் இறவின் முடங்கு புறம் பெரு கிளை
புணரி யிகுதிரை தரூஉந் துறைவன்
புணரி இகு திரை தரூஉம் துறைவன்
புணரிய விருந்த ஞான்றும்
புணரிய இருந்த ஞான்றும்
இன்னது மன்னோ நன்னுதற் கவினே
இன்னது மன்னோ நல் நுதல் கவினே

என்பது, சிறைப்புறம் தம் வேறுபாடு கண்ட புறத்தார் அலர் கூறுகின்றமை தோன்றத் தோழி தலைமகட்குக் கூறுவாளாய்க் கூறியது.

பாடியவர்
நம்பி குட்டுவன்


பாடல் 110 (வாராராயினும்)[தொகு]

தலைவி கூற்று
வாரா ராயினும் வரினு மவர்நமக்
வாரார் ஆயினும் வரினும் அவர் நமக்கு
கியாரா கியரோ தோழி நீர
யார் ஆகியரோ தோழி நீர
நீலப் பைம்போ துளரிப் புதல
நீலம் பைம்போது உளரி புதல
பீலி யொண்பொறிக் கருவிளை யாட்டி
பீலி ஒள் பொறி கருவிளை ஆட்டி
நுண்மு ளீங்கைச் செவ்வரும் பூழ்த்த
நுண் முள் ஈங்கை செ அரும்பு ஊழ்த்த
வண்ணத் துய்ம்மல ருதிரத் தண்ணென்
வண்ணம் துய் மலர் உதிர தண் என்று
றின்னா தெறிதரும் வாடையொ
இன்னாது எறிதரும் வாடையொடு
டென்னா யினள்கொ லென்னா தோரே
என்பது, 1.பருவங்கண்டு அழிந்த தலைமகள் தோழிக்கு உரைத்தது.
2. தலைமகனைக் கொடுமைகூறித் தலைமகளைத் தோழி வற்புறீஇயதுமாம்:
பாடியவர்
கிளிமங்கலங்கிழார்
குறுந்தொகை


குறுந்தொகை 01 முதல் 10 முடிய
குறுந்தொகை 111 முதல் 120 முடிய
குறுந்தொகை 121 முதல் 130 முடிய
குறுந்தொகை 131 முதல் 140 முடிய
குறுந்தொகை 141 முதல் 150 முடிய
[[]]
[[]]
[[]]
[[]]
[[]]
[[]]
[[]]