உள்ளடக்கத்துக்குச் செல்

குழந்தைச் செல்வம்/எலிக் கலியாணம்

விக்கிமூலம் இலிருந்து

14. எலிக் கலியாணம்

எலிக்கும் எலிக்கும் கலியாணம்;
இரவிலே சுப முகூர்த்தமாம்.

வீட்டெலி வந்தது, காட்டெலி வந்தது;
வெள்ளெலி வந்தது, முள்ளெலி வந்தது:
குண்டெலி வந்தது, சுண்டெலி வந்தது.

எங்கெங்கு முள்ள எல்லா எலிகளும்
கூட்டமாய்க் கூடிக் குதிலுள் நுழைந்தபின்,
நல்ல விருந்தேழு நாளாய் நடந்தது;
மங்கல மாக மணமும் நடந்தது;
வாழ்க வாழ்கவே ! மணமக்கள்
வாழ்க வாழ்கவே !