சங்க இலக்கியத் தாவரங்கள்/013-150

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
 

புன்னாகம்–சுரபுன்னை
ஆக்ரோகார்ப்பஸ் லாஞ்சிபோலியஸ
(Ochrocarpus longifolius,Bth. & Hk.)்

‘நந்தி, நறவம், நறும்புன்னாகம்’ என்று கபிலர் கூறிய குறிஞ்சிப் பாட்டு அடியில் (91) வரும் ‘புன்னாகம்’என்பதற்கு நச்சினார்க்கினியர் ‘புன்னையின் விசேடம்’ என்று உரை கண்டார்.

சூடாமணி நிகண்டு ‘புன்னைப் புன்னாகம், நாகம், வழை, சுரபுன்னைப் பேரே’ எனக் கூறுதலின் புன்னாகம் என்பது சுரபுன்னை ஆதல் பெறப்படும். ஆகவே, நாகம், புன்னாகம். வழை என்ற பெயர்கள் சுரபுன்னையைக் குறிக்கும் என்று அறியலாம். ‘புன்னாகம்’ என்பது ‘புன்னை’யை ஒத்தது என்றும், நாகம் எனப்படும் ‘சுரபுன்னை’ புன்னாகம் என்றே கருதப்பட்டது போலும் என்றும் கருதுவதற்கு இடந்தருகின்றது.

சங்க இலக்கியப் பெயர் : புன்னாகம்
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் : நாகம், வழை
பிற்கால இலக்கியப் பெயர் : சுரபுன்னை
தாவரப் பெயர் : ஆக்ரோகார்ப்பஸ் லாஞ்சிபோலியஸ்
(Ochrocarpus longifolius,Bth. & Hk.)