பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/3: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

விக்கிமூலம் இலிருந்து
Adding trailing {{nop}} to break paragraph at the page boundary.
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 9: வரிசை 9:
'''த'''மிழ் நாட்டிலே முன்னாளில் இறைமை பூண்டிருந்த
'''த'''மிழ் நாட்டிலே முன்னாளில் இறைமை பூண்டிருந்த
முடிமன்னர்மூவகையார். அவருட் பண்டையர் என்ற பெயர்க்குரிமை பெற்றவர் பாண்டியரே. பாண்டியருள் இந்நாளில் யாம் பெயரளவால் அறியத்தக்கவர் பலருளர். சங்க நூல்கள் உலகிலே வளருமாறு தமிழ்த் திருப்பணி புரிந்து புகழ் படைத்த சங்க காலத்துப் பாண்டியருட் சிலர் வரலாறேனும் தெளிவுற விளங்குமாறில்லை. இந்நிலைக்குக் காரணம் பண்டை வரலாறுகள் என வழங்கு வனவற்றுட் பெரும்பாலன இயற்கை நெறிக்கு மாறாகவுள்ள அநேக செய்திகளைக் கொண்டிருப்பதும், அறிஞருள் எவரும் உண்மை வரலாறுகளை ஒரு கோவைப் படத் தொகுத்து எழுதி உதவாமையுமேயாம். '''எட்டுத் தொகை''' நூல்கள் எல்லாம் இக்காலத்தில் அச்சுருவம் பெற்று வெளிவந் துலவுகின்றன. இத்திருப்பணி புரிந்த பெரியார்க்குத் தமிழ் மக்கள் நன்றி என்றும் உரியதே. '''பத்துப் பாட்டும் பதினெண்கீழ்க் கணக்கில்''' ஒன்றிரண் டொழிந்தனவும் நல்ல ஆராய்ச்சியுரைகளோடு வெளி வந்துள. இவற்றை யெல்லாம் ஒரு சேர வைத்து ஆராய்வதோடு, சாஸ்னங்கள் என வழங்கும் பண்டையோர் எழுத்துக்களையும் பிற ஆதரவுகளையுங் கொண்டு ஆராய்வதால், நம் பண்டைய மன்னருட் சிலர் வரலாறேனும் ஒருவாறு துணியப்படலாம்.
முடிமன்னர்மூவகையார். அவருட் பண்டையர் என்ற பெயர்க்குரிமை பெற்றவர் பாண்டியரே. பாண்டியருள் இந்நாளில் யாம் பெயரளவால் அறியத்தக்கவர் பலருளர். சங்க நூல்கள் உலகிலே வளருமாறு தமிழ்த் திருப்பணி புரிந்து புகழ் படைத்த சங்க காலத்துப் பாண்டியருட் சிலர் வரலாறேனும் தெளிவுற விளங்குமாறில்லை. இந்நிலைக்குக் காரணம் பண்டை வரலாறுகள் என வழங்கு வனவற்றுட் பெரும்பாலன இயற்கை நெறிக்கு மாறாகவுள்ள அநேக செய்திகளைக் கொண்டிருப்பதும், அறிஞருள் எவரும் உண்மை வரலாறுகளை ஒரு கோவைப் படத் தொகுத்து எழுதி உதவாமையுமேயாம். '''எட்டுத் தொகை''' நூல்கள் எல்லாம் இக்காலத்தில் அச்சுருவம் பெற்று வெளிவந் துலவுகின்றன. இத்திருப்பணி புரிந்த பெரியார்க்குத் தமிழ் மக்கள் நன்றி என்றும் உரியதே. '''பத்துப் பாட்டும் பதினெண்கீழ்க் கணக்கில்''' ஒன்றிரண் டொழிந்தனவும் நல்ல ஆராய்ச்சியுரைகளோடு வெளி வந்துள. இவற்றை யெல்லாம் ஒரு சேர வைத்து ஆராய்வதோடு, சாஸ்னங்கள் என வழங்கும் பண்டையோர் எழுத்துக்களையும் பிற ஆதரவுகளையுங் கொண்டு ஆராய்வதால், நம் பண்டைய மன்னருட் சிலர் வரலாறேனும் ஒருவாறு துணியப்படலாம்.
{{nop}}

07:53, 19 ஆகத்து 2021 இல் நிலவும் திருத்தம்

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஶ்ரீ:

முகவுரை


மிழ் நாட்டிலே முன்னாளில் இறைமை பூண்டிருந்த முடிமன்னர்மூவகையார். அவருட் பண்டையர் என்ற பெயர்க்குரிமை பெற்றவர் பாண்டியரே. பாண்டியருள் இந்நாளில் யாம் பெயரளவால் அறியத்தக்கவர் பலருளர். சங்க நூல்கள் உலகிலே வளருமாறு தமிழ்த் திருப்பணி புரிந்து புகழ் படைத்த சங்க காலத்துப் பாண்டியருட் சிலர் வரலாறேனும் தெளிவுற விளங்குமாறில்லை. இந்நிலைக்குக் காரணம் பண்டை வரலாறுகள் என வழங்கு வனவற்றுட் பெரும்பாலன இயற்கை நெறிக்கு மாறாகவுள்ள அநேக செய்திகளைக் கொண்டிருப்பதும், அறிஞருள் எவரும் உண்மை வரலாறுகளை ஒரு கோவைப் படத் தொகுத்து எழுதி உதவாமையுமேயாம். எட்டுத் தொகை நூல்கள் எல்லாம் இக்காலத்தில் அச்சுருவம் பெற்று வெளிவந் துலவுகின்றன. இத்திருப்பணி புரிந்த பெரியார்க்குத் தமிழ் மக்கள் நன்றி என்றும் உரியதே. பத்துப் பாட்டும் பதினெண்கீழ்க் கணக்கில் ஒன்றிரண் டொழிந்தனவும் நல்ல ஆராய்ச்சியுரைகளோடு வெளி வந்துள. இவற்றை யெல்லாம் ஒரு சேர வைத்து ஆராய்வதோடு, சாஸ்னங்கள் என வழங்கும் பண்டையோர் எழுத்துக்களையும் பிற ஆதரவுகளையுங் கொண்டு ஆராய்வதால், நம் பண்டைய மன்னருட் சிலர் வரலாறேனும் ஒருவாறு துணியப்படலாம்.