சீனத்தின் குரல்/ருசிகரமான சம்பவம்

விக்கிமூலம் இலிருந்து

ருசிகரமான சம்பவம்

சீன இராணுவ கல்லூரியின் ஆசிரியர்களில் ஜப்பானியர் ஒருவர் இருந்தார். ஓர் நாள் அவர் பேசத் தொடங்குமுன் கொஞ்சம் மண்ணை எடுத்து மேஜைமேல் வைத்துத் தட்டையாக சமப்படுத்தி, "இந்த மண்தான் சீன நாடு, இந்த மண்ணில் நாற்பது கோடி கிருமிகள் இருக்கின்றன. அந்தக் கிருமிகளைப் போன்றவர்கள்தாம் சீன மக்கள்" என்று கேலியாகவும் கிண்டலாகவும் சொன்னார். உடனே சியாங் - கே - ஷேக் மேஜையைத் தாவிப்பாய்ந்து, அதன்மேல் இருந்த மண்ணை எட்டு கூறாக்கி -ஜப்பானியர்கள் ஐந்து கோடி பேர், ஆகையால் இந்த மண்ணின் எட்டாவது கூரில் இருக்கும் 5 கோடி கிருமிகளைப் போன்றவர்களா ஜப்பானியர்கள் என்று ஆத்திரம் பொங்கக் கேட்டார். பேசவந்த பேராசிரியர் தலை குனிந்து வெளியேறினார். இந்தச் செய்தியறிந்த ஜப்பான் மனக்கலக்கமடைந்தது. எனினும் இளைஞன் தைரியத்தை அதனால் போற்றாமல் இருக்க முடியவில்லை.

1907-ல் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஷின்போ -கோகியோ , Shinbo-Kokio என்னும் இடத்திலிருந்த இராணுவ கல்லூரியில் சேர்ந்து பீரங்கிப்படை தளகர்த்தனாவதற்கு படித்தார். அங்கே படித்து கொண்டிருக்கும் போதுதான் 1910-ல் Tung-Meng-Uhi டங்-மெங்-ஹி என்ற சீனப் புரட்சி சங்கத்தில் டாக்டர் சன்-யாட்சன் பேசியதை முதன் முதலில் கேட்டார். பிறகு அவரைத் தனியாகச் சந்தித்துப் பேசினர்.