தமிழர் வரலாறும் பண்பாடும்/சிலப்பதிகாரம் பற்றி இளங்கோ

விக்கிமூலம் இலிருந்து


சிலப்பதிகாரம் பற்றி
இளங்கோ

சிலப்பதிகாரம் பற்றிப் பல திறனாய்வுக் கட்டுரைகள் வந்துள்ளன. நூல்கள் பலவும் எழுதப்பட்டுள்ளன. அவற்றுள் பெரும்பாலானவை காவியத்தின் நோக்கைக் குறிப்பிடுகின்றன.

அரைசியல் பிழைத் தோர்க்கு
அறங் கூற்றாவதூஉம்
உரைசால் பத்தினிக்
குயர்ந்தோர் ஏத்தலும்,
ஊழ்வினை உறுத்து
வந்நூட்டும் என்பதூஉம்
சூழ்வினைச் சிலம்பு
காரணமாகச்
சிலப்பதிகாரம் என்னும்
பெயரால்
நாட்டுதும் யாமோர்
பாட்டுடைச் செய்யுள்’

என்ற பதிகச் செய்யுளின் பகுதியைக் காவியத்தின் நோக்கமாகச் சில திறனாய்வாளர் கொள்கின்றனர்.

அரசியல் பிழைத்தோர்க்கு அறங் கூற்றாவது பாண்டியன் நெடுஞ்செழியன் அழிவையும், கொடுங்கோல் அரசன் தலை நகரான மதுரையின் அழிவையும் குறிப்பிடுகிறது. உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்துதல் வஞ்சிக் காண்டத்தில் விவரிக்கப்படுகிறது. ஊழ்வினை உறுத்து வந்தூட்டும் என்பது கண்ணகி, கோவலன் பழம் பிறப்பை மதுராபதி அறிவிப்பதைக் குறிக்கிறது.

இவை யாவும் கதையின் நீதி நோக்கங்கள் என்பது உண்மையே, ஆனால் இம்மூன்று நோக்கங்களும் காவியத்தின் பொது நோக்கு என்று சுருக்கிக் கூறிவிட முடியாது. இவ்வடிகள் பதிகத்துள் காணப்படுகின்றன. பதிகம் பாடியவர் இளங்கோவடிகளல்ல. சாத்தனார் என்று சிலர் கூறுவர். ஆனால் பதிகத்தில், 'அவனுழை யிருந்த தண்டமிழ்ச் சாத்தான் யானறிகுவன் அது பட்ட தென்றுறைப்பேன்' என்னும் அடிகள் சாத்தனார் இளங்கோவடிகளுக்குக் கண்ணகிக் கதையைக் கூறினாரென்று கூறுகின்றன. சாத்தனார் தண்டமிழ்ச் சாத்தான் எனச் சிறப்பிக்கப்படுகிறார். அவர் தன்னைத்தான் இவ்வாறு சிறப்பித்துக்கொண்டார் என்பது பொருத்தமுடையதல்ல. எனவே பதிகம் பாடியவர் சாத்தனார் அல்ல என்பது தெளிவு. பதிகத்தின் இறுதி அடிகளில், 'இவ்வாறைந்தும், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் உரைசாலடிகள் அருள மதுரைக் கூலகிரணிகன் சாத்தன் கேட்டனன் இது, பால்வகை தெரிந்த பதிகத்தின் மரபென் 'அடிகள்' என்று இளங்கோ அழைக்கப்படுவதிலிருந்தும் 'சாத்தன் கேட்டனன் என்று சொல்லப்படுவதிலிருந்தும், இவ்விருவரும் பதிகம் பாடியவர்களல்லர், என்ற முடிவுக்கு நாம் வரலாம். எனவே, பதிகம் பாடிய யாரோ ஒரு புலவர் மேற்கூறிய மூன்று கருத்துக்களுமே காவியத்தின் நடுநாயகக் கருத்துக்கள் என்று கருதினார் என்ற முடிவுக்குத் தான் நாம் வர முடியும். இக் கருத்துக்களையே சிலப்பதிகார ஆசிரியரின் கருத்துக்கள் என்று கூறுவர். சான்றுகள் எதுவுமின்றியே அவ்வாறு கூறுகின்றனர். காவிய ஆசிரியரின் நோக்கமென்ன? இம்மூன்று கருத்துக்களை மட்டும் தான் வலியுறுத்த விரும்பி இக்காவியத்தைப் பாடினரா? என்ற வினாக்களுக்கு நாம் விடைகாண முயலுவோம். நூலின் முடிவில் நூற்கட்டுரை என்ற பகுதியில் பதினெட்டு அடிகளில் நூலின் குறிக்கோள் விளக்கப்படுகிறது. அவ்வடிகள் முழுவதையும் கீழே தருவோம். 89 நூற்கட்டுரை, குமரி வேங்கடங் குண குட கடலா மண்டினி மருங்கிற் றண்டமிழ் வரைப்பிற் செந்தமிழ், கொடுந்தமிழ் என்றிரு பகுதியின் ஐந்தினை மருங்கின் அறம் பொருளின்பம் மக்கள் தேவரென விரு சாரார்க்கும் (5) ஒத்த மரபின் ஒழுக் கொடு புணர எழுத்தொடு புணர்ந்த சொல்லகத் தெழுபொருளை இழுக்கா யாப்பின் அகனும், புறனும் அவற்று வழிப்படு உஞ் செவ்வி சிறந் தோங்கிய பாடலும் எழாலும் பண்ணும் பாணியும் (10) அரங்கு விலக்கே ஆடப் பெற்றனைத்தும் ஒருங்குடன் தழிஇ உடம்படக் கிடந்த வரியுங் குரவையுஞ் சேதமு மென்றிவை, தெரியுறு வகையாற், செந்தமிழியற்கையில் ஆடி நின் நிழலில் நீடிருங்குன்றம் (15) காட்டு வார்போற் கருத்து வெளிப்படுத்து மணிமேகலை மேல் உரைபொருள் முற்றிய சிலப் பதிகாரம் முற்றும். முதலிரண்டிகளில் தமிழகத்தின் எல்லை கூறப்படுகிறது. அரசியல் பிரிவுகளாக மூன்று முடிமன்னர்கள் ஆண்ட மூன்று மண்டலங்களாகத் தமிழகம் பிரிந்திருந்த போதிலும் தமிழ் நாட்டுப் பண்பாட்டு முறையில் ஒன்றே என்பது ஆசிரியர் கருத்து. மூன்று முதல் ஆறடிகளில் தமிழகத்தின் பண்பாட்டின் இயல்பை விளக்கிக் கூறுகிறார். வழக்கு வேறுபாட்டால் இருவகையாக இருந்த தமிழ் மொழி வழங்கிய பகுதிகளை, செந்தமிழ் கொடுந்தமிழ் என்றிரு பகுதி என்று கூறுகிறார். இவ்விரு பகுதிகளிலும் மக்கள் வாழ்க்கை ஐந்து வகைப்பட்டது. மக்கள் குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என்ற ஐவகை நிலங்களில் வாழ்ந்தார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கை 90 வசதிகளை வெவ்வேறு வழிகளில் தங்கள் தொழில்கள் மூலம் பெற்றார்கள். குறிஞ்சி நில மக்கள் நாகரிகத்தின் தொடக்க காலக் கட்டத்தில் இருந்தார்கள் ஆண்கள் வேட்டையாடினார்கள். பெண்கள் அவரை, சாமை, தினை முதலியன பயிர் செய்தார்கள். வேட்டையாடும் தொழிலால் நாடோடியாகத் திரிந்த மக்களினம் நிலை கொள்ளப் பெண்கள் உழைப்பு காரணமாயிற்று. ஆரம்ப நாகரிகம் பெண்கள் வளர்த்த நாகரிகமே. அதையடுத்த நிலங்களில் அதற்கடுத்தக் கட்டத்திலுள்ள முல்லை நாகரிகம் தோன்றி நிலை கொண்டிருந்தது. ஆடுமாடுகளைப் பழக்கி 'ஆப்பயன் மூலம் வாழ்க்கை நடத்திய ஆயர் அங்கு வாழ்ந்து ஒரு புதிய நாகரிகத்தை உருவாக்கினார்கள். ஆற்றோரங்களில் உழவுப் பயன் மூலம் தலைச்சிறந்த நாகரிகம் தலையெடுத்தது. அது வளர்ச்சியுறவே தேவைக்கு எஞ்சிய தானியங்கள் கிடைத்தன. நிலவுடமைச் சமுதாயம் தோன்றிற்று. அதனோடு வர்க்கப் பிரிவினையும் தோன்றி நில உடைமையாளர் அரசியல் ஆதிக்கம் பெற்றனர். குறிஞ்சி நிலத்தாரையும், முல்லை நிலத்தாரையும், போராலும், உறவு முறையாலும் தங்கள் வசப்படுத்தினார்கள். மூவேந்தர் முடியரசுகள் நிலைப் பெற்றன. அரசு நிலைப்பெற்ற பின்னர் வாணிபம் தலை தூக்கியது. கடல் வழியாக வேற்று நாடுகளோடு வாணிபத் தொடர்பு பெருகிற்று. பல்வேறு தொழில் செய்தவர்களிடையே இருந்த முக்கியமாகக் கடற்கரையில் வாழ்ந்த பரதவர், உமணர் போன்ற சாதியினரிடமிருந்து வணிகர் வர்க்கம் தோன்றிற்று. வணிகர் பெரும் பொருளீட்டினர். அரசர்குடிக்குச் சமமான செல்வாக்குப் பெற்றது. சிலப்பதிகாரக் காலத்தில் அரசர் ஆதிக்கம் ஓங்கி நின்றது. மூன்று மண்டலங்கள் தனித்து அரசியல் பகுதிகளாகப் பிரிந்தன. குறிஞ்சி நில மக்களும், முல்லை நில மக்களும், பாலை நில மக்களும், நெய்தல் நில மக்களும் தனித்தனியான பண்பாடுகளை பின்பற்றி வந்தனர். நிலவுடைமையாளர் ஆதிக்கத்திலிருந்தனர். நிலவுடைமைச் சமுதாயத்தின் பண்பாடு மற்றைப் பண்பாடுகளைக் இணைக்க முயன்றது. கலையிலும், இலக்கியத்திலும் நிலவுடைமையாளர்களது செல்வாக்கு ஓங்கியிருந்தது. - - 9] இந்திலையில் செல்வாக்குப் பெற்று வந்த பெருங்குடி வணிகர்கள் நிலவுடைமை ஆதிக்கத்தால் தங்கள் வாணிபத்தைக் கட்டுக் கடங்கி பற்றி நடத்த வேண்டியதாக இருந்தது. மூன்று அரசியல் பிரிவுகள் அவர்களுக்கு விலங்காக இருந்தன. உள் நாட்டிலும் அரசன் தங்கள் அரசியல் செல்வாக்குக்கு உட்பட்டு தங்கள் வாணிபத்துக்கு உதவி செய்ய வேண்டுமென்று அவர்களது தேவையும் விருப்பமுமாக இருந்தது. இவ்விருப்பத்தையும் தேவையையும் நிறைவேற்றிக்கொள்ள அவர்கள் தமிழ்நாட்டிலுள்ள மக்களைத் தங்கள் கோரிக்கைகளுக்கு ஆதரவாகத் திரட்ட முயன்றார்கள். இதனை நிறைவேற்றப் பல்வேறு வகையில் முயன்றார்கள். தமிழ் நாடு முழுவதிலும் சைன, பெளத்த மதங்களைப் பரப்பி இதனைச் சாதிக்க முயன்றார்கள். இலக்கியத்தின் மூலமும் அவர்களது கருத்தைப் பரப்ப முயன்றார்கள்.

தமிழ் நாடு ஒரே நாடு என்ற கருத்து அவர்களது நலன்களுக்கு ஒத்திருந்தது போலவே மூன்று மண்டலங்களிலுமுள்ள தமிழ் மக்களுடைய நலன்களுக்கும் ஒத்திருந்தது. மக்களது பொருளாதார வாழ்வுக்கு அது ஒரு முன்னேற்றப் பாதையைக் கட்டிற்று. ஆகவே மக்களை ஒரே கருத்தின் அடிப்படையிலும், பண்பாட்டின் அடிப்படையிலும் ‘ஒரே தமிழ்நாடு’ என்ற கருத்தைப் பரப்பினர். ஐவகை நிலங்களின் தனித்தனியான பண்பாட்டு அம்சங்களையும், தங்களது பண்பாட்டின் தலைமையில் இணைக்க முயன்றனர். நிலவுடைமைச் சமுதாயம் ஈன்ற நாகரிகத்தின் சிறப்பான அம்சங்களைப் பாதுகாத்து முன்னேற்றமான பல அம்சங்களை அதனோடு இணைத்தனர். நிலவுடைமை வர்க்கத்தை எதிர்க்க இம் முயற்சிகளனைத்தையும், இணைக்க முயன்றனர். மக்களை இவ்வாறு ஒற்றுமைப் படுத்தியதோடல்லாமல், அவர்கள் வணங்கும் தேவர்களை ஒருவருக்கொருவர் உருவாக்கினர். மக்களுக்கும், தேவருக்கும் பொதுவான ஒரு நீதியை உருவாக்க முயன்றனர்.

‘ஐந்திணை மருங்கின் அறம் பொருளின்பம்
மக்கள் தேவ ரென விருசார்க்கும்
ஒத்த மரபின் ஒழுக்கொடு; புணர

ஐந்திணை மக்களுக்கும் வேறு வேறான ஒழுக்கத்தை, யாவருக்கும் ஒத்த மரபான ஒழுக்கமாக உயர்த்த நடந்த முயற்சியைச் சிலப்பதிகாரம் வரவேற்றுப் போற்றுகிறது. இந்த ஒற்றுமை இயக்கத்துக்கு காவிய முறையில் வாழ்த்துக் கூறுகிறது. ஐவகை நிலங்களிலுமுள்ள கலையை ஒன்றுபடுத்த முயலுகிறது.

ஐவகை நிலங்களில் முளைத்தெழுந்த ஆடல் பாடல்களை ஒன்றுபடுத்தும் முயற்சிக்கு அவர்கள் ஆக்கமளித்தனர். தமிழ் நாடு முழுவதற்கும் ஒரே கலையை, பல்வேறு வேறுபாடுகளையும் உள்ளடக்கி, உருவாக்கும் முயற்சியை வரவேற்றனர்.

வரலாற்றில் மிகச் சிறந்த, ஒரு கால கட்டத்தின் கண்ணாடியாக வாழ்க்கையின் பிரதிபலிப்பாக வாழ்க்கையை முன்னேற்றமான முறையில் மாற்ற முயலும் முயற்சிகளின் கலையுருவமாகச் சிலப்பதிகாரம் திகழ்கிறது. இப்படித்தான் காவியம் அமைந்திருக்கிறது என்று இளங்கோவடிகள் கூறுகிறார்.

ஐந்திணை மக்களது வாழ்க்கையிலிருந்து ஒழுக்கம் தோன்றுகிறது. அதனை அகம் புறம் என்று பிரித்து இலக்கியம் அமைக்கிறது. இவ்வொழுக்கத்தின் வழிப்பட்டதே ஆடல், பாடல் பாணி, அரங்கு விலக்கு வரி குரவை என்ற கலைகளனைத்தும், இவையனைத்தையும் தான் பண்பாடு என்று கூறுகிறோம். தமிழ் நாட்டின் பண்பாட்டை மலையைக் கண்ணாடியில் காண்பது போல இக்காவியம் காட்டுகிறது. மணிமேகலை என்ற காவியம் இதே பண்பாட்டைத் தொடர்ந்து விளங்குகிறது. இக்காவியத்தின் நோக்கம் பற்றி இளங்கோவடிகளின் கருத்து இதுதான்.

‘ஆடி நன்நிழலின் நீடிருங் குன்றம்
காட்டுவார் போற் கருத்து வெளிப் படுத்து
மணி மேகலை மேல் உரைப் பொருள்
முற்றிய சிலப் பதிகாரம் முற்றும்.’

இப்பொது நோக்கம் நிறைவேறக் காவியத் தலைவி கண்ணகி கருவியாகிறாள். புகார் காண்டத்தில் பெருங்குடி வணிகரின் செல்வச் சிறப்புக் கூறப்படுகிறது.

செல்வம்,

‘உரை சால் சிறப்பின் அரசு விழை திருவிற்
பரதர் மலிந்த பயங்கெழு மாநகர்
முழுங்கு கடல் ஞாலமுழுவதும் வரினும்
வழங்கத் தவா அவளத்த தாகி
அரும் பொருள் தரூஉம் விருந்திற்றே எம்
ஒருங்கு தொக் கன்ன உடைப்பெரும் பண்டம்,
கலத்தினுங் காலினுந் தருவனரீட்டக்
குலத்திற்குன்றாக் கொழுங் கொடிச் செல்வர்.’

வணிகர் ஈட்டிய செல்வத்திலிருந்து தான் நாட்டில் அறனும் இன்பமும் நிலைக்கின்றன. நாட்டில் அறம் பொருள் இன்பம் என்ற மூவகைப்பட்ட வாழ்க்கைக்கும், வணிகர் முயற்சியே அடிப்படையானது. ஆகவே அவர்கள் மக்களுள் தலைமை பெற்றனர்.

கண்ணகி, பிறந்த நகரை விட்டு கணவனோடு மதுரை செல்லும் வழியில் மருத நிலவாழ்க்கை வருணிக்கப் படுகிறது. பாலை நிலத்தில் எயினர் குடியில் கண்ணகி தங்கி அவர்களது தெய்வ வழிபாட்டைக் கண்டு சொல்லுகிறாள். மதுரையையடுத்த ஆயர் சேரியில் மாதரி கண்ணகிக்கு அடைக்கலம் அளிக்கிறாள். இவ்வாறு பலவகைப்பட்ட மக்களது வாழ்க்கையோடும், கண்ணகியின் வாழ்க்கைத் தொடர்பு படுத்தப்படுகிறது. அவர்களது வாழ்க்கையும், கலையும் அறிமுகப் படுத்தப்படுகின்றன. கடைசியில் மதுரையில் உண்மையை நிலைநாட்ட வேண்டி வழக்குரைத்து, சிலம்பை உடைத்துத் தன் கூற்றை நிரூபிக்கிறாள். நாடு தாண்டி நாடு வந்து வாணிபம் செய்யும் உரிமையை மறுத்த பாண்டியனது தலைநகரைத் தீக்கிரையாக்குகிறாள். அப்பொழுது அந்தகர மக்கள் நகரத்தைத் தீக்கிரையாக்குவது கொடுமை என்று கூறவில்லை. இது அறச் செயல் என்றே கூறுகிறார்கள்.

‘வரு விருந் தோம்பி
மனையற முட்டாப்
பெருமனைக் கிழத்தியர்
பெரு மகிழ் வெய்தி



இலங்கு பூண் மார்பிற்
கணவனை இழந்து
சிலம்பின் வென்ற
சேயிழை நங்கை
கொங் கைப் பூசல்
கொடிதோ வன்றெனப்
பொங்கேரி வானவன்
தொழுதனர் ஏத்தினர்.’

தாங்கள் துன்பமுறும்பொழுது, கண்ணகியின் கொள்கை,நியாயம் என்பதை உணர்ந்து அவர்கள் நகரம் பற்றி எரிவதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறார்கள்: அக்கினிக் கடவுளை வணங்குகிறார்கள்.

அறத்திற்காகப் போராடி உயிர் நீத்த கண்ணகியை சேர நாட்டின் குறவர்கள் போற்றுகிறார்கள். அவர்களது வாழ்க்கையும், பண்பாடும் காவியத்தோடு தொடர்புபடுத்தப்படுகிறது. வீரபத்தினிக்குக் கோவில் கட்டி வழிபட்ட சேரன் செங்குட்டுவனது வெற்றி வஞ்சிக் காண்டத்தில் கூறப்படுகிறது. இவ்வாறு அக்காலத்திய தமிழ் நாட்டு வாழ்க்கையின் கண்ணாடியாகச் சிலப்பதிகாரம் விளங்குகிறது.

பதிகத்தில் கூறிய மூன்று நோக்கங்களும், இப்பொது நோக்கத்துக்கு உட்பட்டவையே. அவற்றை மட்டும் காவியத்தின் நோக்கமாகக் கொள்வது காவியத்தின் முழுமையான நோக்கத்தைக் காண்பதாகாது. காவியத்தின் முழுமையான நோக்கம் தமிழகத்தின் வாழ்க்கை முழுவதையும், சித்திரமாகத் தீட்டிக் காட்டுவதே ஆகும். சிலப்பதிகாரத்தைப் பற்றி இளங்கோவடிகள் கருத்து இதுவே.