திருக்குறள் செய்திகள்/இனித் தினமும்

விக்கிமூலம் இலிருந்து

இனித் தினமும்
தெய்வப்புலவன்
வள்ளுவன் தந்த
அறிவுக் கதிர்
செழுஞ்சுவை தோய்ந்த
பாகு என அமைந்த
சொல்தேர்வு
பாலொடுதேன்
கலந்து வைத்தன்ன
உரைஅமுது
எளியோரும் அறிய
அவர்வழி நின்றே
ஈர்க்கும் காந்தம்
பழந்துண்டுகள்
எனப் பாங்காய் அமைந்த
பழமொழிகள்
படிக்க அலுப்பு இல்லை
விறுவிறுப்புடன் கூடிய
புதினம் இது
உப்பமைந்தன்ன
சுவையழகு தோற்றும்
உவமைச் செய்திகள்
அன்னை தமிழுக்கு
அணியகம் இழைத்த
அணிகலம்
நிரந்து இனிதுகூற
அமைத்துவைத்த
சொல்லடுக்குகள்
இனித் தினமும்
பேசிப் பழகிட
ராசீயின் திருக்குறள் செய்தி


டாக்டர் இரா. குமரன், பூண்டி.