திருப்புமுனை/5

விக்கிமூலம் இலிருந்து

5

தனக்கு முன்னால் சென்று கொண்டிருக்கும் இனியனை எட்டிப் பிடிக்கும் பாவனையில் துரித நடைபோட்டு வந்தான் அருள் இனியனை நெருங்கியதும் கேட்டான்:

“இனியா! பள்ளி ஆண்டுவிழாக் கட்டுரைப் போட்டிக்குப் பெயர் கொடுத்துட்டியா?” ஆர்வத் துடிப்புடன் கேட்டுவிட்டு, இனியனின் முகத்தைப் பார்த்தான்.

“நான் மட்டுமா? நம்ம கண்ணாயிரம், கண்ணன், மணி, தங்கதுரை எல்லாருமே பெயர் கொடுத்திருக்காங்க.”

இனியன் தந்த பட்டியலைப் பார்த்தபோது அருளுக்கு ஆச்சரியம் ஏதும் ஏற்படவில்லை.

“அவங்கள்’லாம் பெயர் கொடுப்பாங்கன்னு எனக்கு முன்னாலேயே ரொம்ப நல்லாத் தெரியும்! இவங்களுக்கும் கட்டுரைப் போட்டிக்கும் என்னடா சம்பந்தம்? ஒழுங்கா பாடத்தைப் படிக்கிறதும் பள்ளிக்குவர்றதுமே தகராறு. இதிலே...” அருள் முடிக்கும் முன்பே இனியன் இடைமறித்துப் பேசினான்.

“அவங்களும் போட்டியிலே பங்கெடுக்கிறது நல்லதுதானே, அருள். போட்டி கடுமையா இருந்தாத்தானே திறமையான வங்களைத் தேர்ந்தெடுக்க முடியும். பரிசு வாங்குறவங்க மதிப்பும் உயரும். போட்டியிலே கலந்து திறமையை காட்டறதுக்காகவாவது நிறையப் படிக்கனும் சிந்திக்கனும் இல்லையா, அருள்.”

இனியனின் கருத்தை முழுக்க ஏற்க இயலாது என்ற பாவனையில் தலையை மேலும் கீழுமாக ஆட்டி அழகு காட்டினான் அருள்.

“அவங்க சிந்திக்க ஆரம்பிச்சுட்டாங்கன்னா யாருக்கோ ஆபத்து’ன்னுதான் அர்த்தம்.” கடந்த கால அனுபவ அடிப்படையில் கருத்துரைத்தான் அருள்.

“நம்ப நண்பர்களைப்பத்தி நாமே தப்பாப் பேசக்கூடாது அருள். அவங்களும் நல்லவங்க. நாளடைவிலே திருந்துவாங்'கன்னே நம்புவோம்.”

“நீ நம்பிக்கிட்டே இரு நான் வர்றேன்.’ கூறிவிட்டு அருள் விரைந்து நடக்கலானான். நாளடைவிலே திருந்துவாங்’கன்னே நம்புவோம்”.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருப்புமுனை/5&oldid=489832" இலிருந்து மீள்விக்கப்பட்டது